உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர்கள், கண்டக்டர் காயம்

அரசு பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர்கள், கண்டக்டர் காயம்

காரியாபட்டி: நேற்று காலை காரியாபட்டியிலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலை கே. கரிசல்குளம் விலக்கில் திரும்பிய போது, பின்னால் தார் கலவை ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. நடு ரோட்டில் பஸ் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் டிரைவர் ராமச்சந்திரன் 56, கண்டக்டர் அரசு 42, லாரி டிரைவர் விவேக் 32, காயமடைந்தனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !