மாலை அணியும் நிகழ்ச்சி
சிவகாசி: மதுரையில் நாளை நடக்கும் முருகபக்தர்கள் மாநாட்டிற்காக நேற்று சிவகாசி முருகன் கோயிலில் பா.ஜ., சார்பில் முருக பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்தனர். முருக பக்தர்கள் மாநாடு பொறுப்பாளர் மகேஸ்வரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் மாரியம்மாள், மேற்கு ஒன்றிய பொருளாளர் அழகர்ராஜ், ஓபிசி அணி மண்டல தலைவர் பிள்ளையார், நிர்வாகிகள் ராமர் பாண்டியன் சபரி முத்து பங்கேற்றனர்.