உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பச்சை நிற கண்ணாடி மணி அகழாய்வில் கண்டெடுப்பு

பச்சை நிற கண்ணாடி மணி அகழாய்வில் கண்டெடுப்பு

சிவகாசி; விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில், அகெட் எனப்படும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது.விஜயகரிசல் குளத்தில் நடக்கும் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட, 20 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, தங்க மணி, சூதுபவள மணி உள்ளிட்ட, 3,600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகெட் எனப்படும் கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் தற்போது கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், '' நம் முன்னோர்கள் தொழிற் கூடம் நடத்தி, வாழ்ந்ததற்கு சான்றாக அதிக சங்கு வளையல்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் அகெட் எனப்படும் விலை மதிப்புமிக்க கல் மணி, பச்சை என்ற கண்ணாடி மணி கிடைத்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ