உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ

சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ

விருதுநகர் : விருதுநகர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15வயதுடைய சிறுமி. இவர் எட்டாம் வகுப்பு வரை படித்து முடித்து படிப்பை நிறுத்தி வீட்டில் இருந்தார். இவருக்கும் 32வயதுடைய உறவினர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்த போது தனிமையில் இருந்தனர். இதனால் சிறுமி கர்ப்பமானதால் திருமணம் செய்து ஸ்ரீவில்லிப்புத்துார் அருகே தனியாக வீட்டில் வசித்தனர். அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற போது சிறுமி கர்ப்பமாகி குழந்தை திருமணம் நடத்திருப்பது தெரிந்தது. விருதுநகர் மகளிர் போலீசார் சிறுமியின் கணவர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை