ஆடு திருட்டு: 4 பேர் மீது வழக்கு
காரியாபட்டி: காரியாபட்டி தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி 54, ஆடுகள் வளர்த்து வருகிறார். வீட்டில் கட்டிப் போட்டிருந்த ஒரு ஆட்டை இரவில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ. 20 ஆயிரம். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சமயன், ஸ்ரீராம், ராமச்சந்திரன், தண்டியநேந்தல் கருப்பசாமி என தெரிந்தது. மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.