பேத்தியை சீண்டிய தாத்தா கைது
சாத்துார்: விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணை அருகே கிராமத்தை சேர்ந்தவர், 70 வயது முதியவர். பக்கத்து வீட்டில் அவரது அண்ணன் மகனின் மனைவி, 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பின், தாயிடம் சிறுமி அழுதபடி நடந்ததை கூறினார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோவில் முதியவரை கைது செய்தனர்.