சூரிய ஒளியை பயன்படுத்த அறிவுறுத்தல்
விருதுநகர்: மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லாத செய்திக்குறிப்பு: பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்க கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களை கொண்ட மின்னாற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைக்கவும், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கில் பகலில் அதிகளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த அனைத்து விவசாயிகளும் முடிந்தவரை விவசாய மின்மோட்டார்களை பகல் நேரங்களில் பயன்படுத்த வேண்டும், என்றார்.