லயன்ஸ் மாணவர்கள் சாதனை
ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் மண்டல அளவிலான எறிபந்து போட்டி ராஜபாளையம் ஜோசப் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.இதில் 18 பள்ளிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஸ்ரீவி லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த 80க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாணவர்களுக்கான 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடமும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தனர்.சாதனை மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பாண்டிஸ்வரி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.