புதிய துணை மின் நிலையம் ஆய்வு
சாத்துார்: சாத்துார் கோட்டூரில் தமிழ்நாடு மின் உற்பத்திமற்றும் பகிர்மான கழகம் மூலம் சாத்துார் கோட்டூரில் 745/400 கிலோவாட் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடியுரும் தருவாயில் உள்ளது. இதனை நேற்று தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் சுகபுத்திரா, திருநெல்வேலி மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் சந்திரா, மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.