டூவீலர்கள் மோதல் ஒருவர் பலி
நரிக்குடி : நரிக்குடி நாலூரைச் சேர்ந்த அழகர்சாமி 38, கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சாலை இலுப்பைகுளம் சென்றார். ( ஹெல்மெட் அணியவில்லை) அப்போது மாணிக்கனேந்தலை சேர்ந்தவர் சிவக் குமார் 27, தாய் ராம லட்சுமி 51,யுடன் டூவீலரில் வெளியூர் சென்று, வீடு திரும்பினார். (ஹெல்மெட் அணியவில்லை) மாணிக்கனேந்தல் விலக்கில் ரோட்டை கடக்க முயன்ற போது, அழகர்சாமி ஒட்டி வந்த டூவீலரில் மோதியதில் அழகர்சாமி சம்பவ இடத்திலே பலியானார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.