உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போக்சோ வழக்கு: தந்தை கைதுசாத்துார்: சாத்துார் அருகே சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் போக்சோவில்கைது செய்தனர். சடையம்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து 42. இவர் மனைவி இறந்துவிட்டார். தனது தாய், 16 வயது மகளுடன் வசித்து வந்தார். மது போதையில் அவர் மகளை மிரட்டி பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கர்ப்பமான சிறுமி போலீசில் புகார் செய்தார். அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.வாலிபர் மர்ம சாவுசாத்துார்: சாத்துார் சாமியார் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன் 22. நேற்று மதியம் 12:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள பாழடைந்த விவசாய கிணற்றில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை