உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலருவி ரயிலில் குளிர்சாதன பெட்டி

பாலருவி ரயிலில் குளிர்சாதன பெட்டி

விருதுநகர்:துாத்துக்குடி -- பாலக்காடு இடையே தினமும் இயக்கப்படும் பாலருவி ரயில்களில் (16791/16792) ஒரு பொதுப் பெட்டிக்கு பதில் ஜூலை 4 முதல் ஒரு மூன்றடுக்கு ஏ.சி., படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி ஒரு மூன்றடுக்கு ஏ.சி., படுக்கை வசதி பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் திருநெல்வேலி, சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை, புனலுார், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன் வழியாக இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி