கோயிலில் பாம்பு
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் மாதாங்கோயிலில் அம்மன் கருவறையில் ஐந்தடி நீளம் உள்ள சாரை பாம்பு இருந்துள்ளது. தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனை வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விட்டனர்.