உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / படியில் பயணித்த மாணவன் உடல் நசுங்கி பலி

படியில் பயணித்த மாணவன் உடல் நசுங்கி பலி

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவை சேர்ந்த அங்குராஜ் மகன் ஆகாஷ் 17, பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு மாணவர். நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு தனியார் பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தார். படியில் பயணித்த போது ரயில்வே மேம்பாலம் அருகே தடுமாறி கீழே விழுந்த ஆகாஷ் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வத்திராயிருப்பை சேர்ந்த பஸ் டிரைவர் பூதப்பாண்டியிடம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ