தினமலர் நாளிதழால் செப்பனிடப்பட்ட ரோடு
விருதுநகர்: விருதுநகரில் புல்லலக்கோட்டை ரோட்டில் இருந்து சர்வீஸ் ரோடு இணையும் பகுதி முக்கிய இடமாக உள்ளது. இங்கு சிறு பள்ளம் இருந்தது. நாளடைவில் வாகனங்கள் வந்து சென்று சென்று பள்ளம் கிடங்காகி பெரிதாகி விட்டது. இதனால் வாகனங்கள் பழுதாகின. வாகனங்களை ஓட்டுவோரின் முதுகெழும்பு பாதிப்பை சந்திக்கின்றன. இது குறித்து அக். 16ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரோட்டை சீரமைத்தது.