21 கிலோ குட்கா பதுக்கிய மூவர் கைது
விருதுநகர் : விருதுநகர் அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் செல்வம் 43. இவருக்கு சொந்தமான வீட்டில் தடை செய்யப்பட்ட 21 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். ஆமத்துார் போலீசார் செல்வம், உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் 37, ஈஸ்வரன் 35, ஆகியோரை கைது செய்தனர்.