வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இன்றைக்கு சென்னை உட்பட பெரும்பாலான பெரு நகரங்களில் மக்கள் நடந்து செல்வதற்கு கூட இடமில்லை. சாலையின் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சாலையோர கடைகள் கட்டுப்பாடின்றி பெருகிவிட்டன. மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து நடு ரோட்டில்தான் நடக்க வேண்டியுள்ளது. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? நண்பர் வசிக்கும் கூடுவாஞ்சேரி பகுதி மிகவும் மோசம். மக்கள் பயன்படுத்துவதற்கு சேவை சாலைகள் Service Rode இல்லாததால் ஏராளாமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிறு குழந்தைகள், வயதான முதியவர்கள் யாரும் வெளியே செல்லமுடியாத நிலை உள்ளது. ஏனென்றால், நடந்து செல்வதற்கு இடமில்லை. நான்கு வழி சாலையில் இரு வழிசாலைதான் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. மற்றதெல்லாம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் என்னதான் செய்கிறது என்று தெரியவில்லை. பணம் வாங்கிக்கொண்டு எல்லாவற்றையும் அனுமதிக்கிறார்கள். மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.