மரக்கன்று நடும் விழா
விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீ வித்யா கலை, அறிவியல் கல்லுாரியில் தாளாளரான திருவேங்கட ராமானுஜ தாஸ், அவரின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு வளாகத்தில் 80 மரக்கன்றுகள் நடும் விழா கல்லுாரி முதல்வர் கணேசன் தலைமையில் நடந்தது. இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் மதன் நன்றி கூறினார்.