காத்திருப்பு போராட்டம்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில சங்கம் சார்பில் நான்காம் நிலைக்கு இணையான டி கிரேடு ஊதியம் வழங்குவது, வாரிசுகளுக்கு 25 சதவீத கருணை அடிப்படையில் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. நிர்வாகி கனகராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.