திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நேற்றிரவு நடந்தது.நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளிய வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாண வைபவத்தை பட்டர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. நாளை (ஜூன் 8)காலை 8:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.