கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்
காரியாபட்டி:காரியாபட்டியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்வள மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செழுமை கருவேலம் மரங்கள் அகற்றும் பணியை கலெக்டர் சுகபுத்ரா துவக்கி வைத்தார். நீர்நிலைகள், மக்கள் பயன்பாட்டு பகுதிகளில் பரவி வளர்ந்துள்ள செழுமை கருவேலம் மரங்களை அகற்றி, இயற்கை வளங்களை பாதுகாக்க, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை தரமாக, விரைவாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் கலந்து கொண்டனர்.