அழகிரிக்கு புதிய சம்மன் மனு : நீதிபதிகள் உத்தரவு
மதுரை: இன்ஜினியரிங் கல்லூரிக்காக நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து விளக்கமளிக்க கலெக்டர் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி மத்தியமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை வழக்கு நிலுவையில் இருப்பதால் கலெக்டர் விசாரிக்க கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கை திரும்ப பெறுவதாக அரசு தரப்பு வக்கீல் தெரிவித்ததையடுத்து மனு முடிவுக்கு வந்தனர்.மே<லும் புதிய சம்மனை அனுப்பும் படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.