உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் ரகளை

பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் ரகளை

உசிலம்பட்டி: உள்ளாட்சி தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சியின் நிலை குறித்து ஆராய நடந்த கூட்டத்தில் ரகளை ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய எம்.எல்.ஏ., கதிரவன் தலைமையில் உசிலம்பட்டியில் இன்று கூட்டம் நடந்தது. இதில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் கூட்ட அறை கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் இன்று மாலை திண்டுக்கலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் பார்வர்டு பிளாக் அ.தி.மு.க., கூட்டணியில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை