உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

 தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

சென்னை: சட்டசபையில், நேற்று 110 விதியின் கீழ், முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் அறிவிப்புகளை வாசித்தபோது, தி.மு.க., -- எம்.எல்.ஏ., ஆஸ்டின் எழுந்து, சட்டசபை விதிகள் புத்தகத்தில், ஒரு பக்கத்தை காண்பித்து, சபையில் பேச வாய்ப்பு கேட்டார். அவரை, சபாநாயகர் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஏதோ கூறியபடி நின்று கொண்டிருந்தார். அமைச்சர்கள், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், முதல்வர் தனது பேச்சை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, ஆஸ்டின் மீது நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் எச்சரித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் கே.என்.நேரு ஆகியோர், ஆஸ்டினை அமர செய்தனர். இதனால், சட்டசபையில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
செப் 03, 2026 06:51

என்னது ஒன்ற இன்ச் காலரை தூக்கி விட்டு கொண்டு தொட்டு பார்...ஸீண்டி பார் என்ற திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புர துக்ளக் கோமாளியின் உடன் பிறப்புக்கே எச்சரிக்கையா...


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ