உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னியாகுமரியில் தாமதமாக தொடங்கிய படகு போக்குவரத்து

கன்னியாகுமரியில் தாமதமாக தொடங்கிய படகு போக்குவரத்து

நாகர்கோவில் : முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், மூன்று கடல்களும் வேறு வேறு நிலைகளில் காணப்பட்டதால், ஒரு மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், காலை, கிழக்கே உள்ள வங்கக் கடல் அமைதியாகவும், மேற்கே உள்ள அரபிக்கடல் ஆர்ப்பரித்து, பெரிய அளவில் அலைகள் எழுந்து கொண்டிருந்தது. இவை இரண்டுக்கும் மாறாக, தெற்கே உள்ள இந்திய பெருங்கடல் உள்வாங்கி காணப்பட்டது.இந்த மாறுபட்ட நிலைகளால், ஒரு மணி நேரம் கடலின் நிலையை, பூம்புகார் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், உன்னிப்பாக கவனித்த பின், 9 மணிக்கு தான் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. எனினும், கடல் நீர்மட்டம் குறைவு காரணமாக, திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் செல்ல வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ