உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு பஸ்களில் முன்பதிவு துவக்கம்

தீபாவளிக்கு பஸ்களில் முன்பதிவு துவக்கம்

தீபாவளி பண்டிகைக்கு, அரசு விரைவு பஸ்களில் பயணிப்பவர்களுக்காக, 30 நாட்களுக்கு முன், முன்பதிவு துவங்குகிறது. வரும் அக்டோபர் 26ம் தேதி, தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக செல்பவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, மாநகரங்களில் இருந்து புறப்பட்டு செல்ல தொடங்கிவிடுவர். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களையும் சேர்த்து, 36 இடங்களில் முன்பதிவு செய்யலாம். சென்னையில் மட்டும், கோயம்பேடு, பிராட்வே, தாம்பரம், தி.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் இந்த வசதி உள்ளது.குறிப்பாக, கோயம்பேடு பஸ் நிலையத்தில், காலை 7 மணி முதல், ஆறு கவுன்டர்கள் இயக்கப்படும்.

இதன்படி, அடுத்த மாதம் 24ம் தேதி பயணம் செய்பவர்கள், இந்த மாதம் 25ம் தேதியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்த முறை, பண்டிகை புதன் கிழமை வருவதால், இரண்டு நாட்களுக்கு முன்பாக (திங்கட்கிழமை) முன்பதிவு செய்பவர்களில் பலர், அதற்கு முன்பாக உள்ள விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளையும் பயன்படுத்திக் கொள்வர். இதனால், அடுத்த மாதம் 21ம் தேதியில் இருந்தே இம்முறை தீபாவளி பயணம் துவங்கிவிடும் நிலை உள்ளது. அதனால், இன்று மற்றும் நாளை முதலே தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு சூடுபிடிக்கத் தொடங்கிவிடும் என அதிகாரிகள் தரப்பில் கூறினர்.முன்பதிவு முடிந்த பின்னரே, கூடுதலாக எவ்வளவு சிறப்பு பஸ்களை இயக்குவது என்பது குறித்து திட்டமிடப்படும் என, போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.-எஸ்.விவேக்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை