உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள் -2

ரம்ஜான் சிந்தனைகள் -2

அக்கறையுடன் கடைபிடிப்போம்

நோன்பு நோற்பதால் பாவம் மன்னிக்கப்படுகிறது. அத்துடன் உடலிலும் பல மாற்றம் நிகழ்கிறது. பலரும் அதிகமாக சாப்பிடுகின்றனர். இதனால் நோய்க்கு ஆளாகின்றனர். இதை சரிசெய்ய நோன்பு நோற்கப்படுகிறது. ஆம். அதிகாலை 4:30 முதல் மாலை 6:30 மணி வரை (14 மணி நேரம்) சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருப்பதால் மனக்கட்டுப்பாடு உண்டாகிறது.உடல் உறுப்புகள் வேலைப்பளு இன்றி ஓய்வெடுக்கிறது. இந்த நேரத்தில் உடலிலுள்ள கழிவுகள் வெளியேறும். சேதமடைந்த திசுக்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். மேலும் உணவுக் கட்டுப்பாட்டால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து போன்ற பிரச்னைகள் கட்டுக்குள் வரும். பார்த்தீர்களா... நோன்பு நோற்றால் இறைவனின் கருணை மட்டுமல்ல. அவனது அருளால் உடல்நலத்துடன் வாழலாம். எனவே நோன்பை அக்கறையுடன் கடைபிடிப்போம்.இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:34 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:05 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ