வாசகர்கள் கருத்துகள் ( 7 )
குடிநீர் சப்ளை ஒழுங்கா இருக்குதா?
செய்தியின் தலைப்பு "மாசு வாரியம்" என நக்கலாக மிகச்சரியாக உள்ளது. அவர்கள் அதை கட்டுப்படுத்தவில்லை என அருமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மின்சாரம், சாலைகல், குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை அதிக முதலீடு மற்றும் இடவசதி தேவை. இவற்றை தனிநபர்களோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பிலோ கட்டமைத்து செயல்படுத்துவது சிரமம். எனவேதான் இவைகளை பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் கட்டமைத்து செயல்படுத்தப்படுகிறது. இவைகளுக்காக தேவையான நிதியை வரிவசூல் மூலமும் உபயோகிப்பாளர்களிடமிருந்து காலாண்டு கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இவற்றை முறையாக செய்யாமல் குடியிருப்பாளர்களை கட்டாயப்படுத்துவது முறையல்ல. அதோடு இதுபோன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள குடியிருப்புகளுக்கு எந்தவித வித்தியாசமும் இல்லாமல் சொத்துவரி வசூல் செய்யப்படுகின்றது. அதைவிட கொடுமை என்னவென்றால் கழிவுநீரை முறையாக சேகரித்து சுத்திகரிக்கும் நீர்நிலைகளில் கலக்கவிடுவது அதிகமாக உள்ளாட்சி அமைப்புகள்தான். சிங்கார சென்னையின் கூவம் மற்றும் அடையாறு, மதுரையின் வைகை நதி, அமராவதி ஆறு போன்ற ஆறுகளின் இன்றைய நிலை இதற்க்கு சான்று.
முன் கூட்டியே சேய்து இருக்கனும் பறவை இல்லை இப்போவது சேய்த்தார்களே நன்று
கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிக்கு இடமும் அதற்கான வசதியும் தேவை. பல கட்டிடங்கள் எப்பொழுதோ பின்னொரு நாளில் இம்மாதிரி கட்டாயம் வருமென்று தெரியாமலிருக்கும்பொழுது கட்டப்பட்டவை, அவற்றில் இந்த வசதிக்கு இடமில்லையென்றால் எப்படி கட்டாயப்படுத்த முடியும்? மேலும் இந்த வசதியினால் கெட்ட வாடை வந்து அங்கு வசிப்பவர்களுக்கு சுகாதாரக் கேடு வரக்கூடும். இவற்றையெல்லாம் ஆராயாமல் சட்டம் போடலாமா?
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் காட்டில் கோடைமழை
என்ன உத்தரவு போட்டாலும், யாரும் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை, கழிவு நீர் நேர கூவத்தில் கலக்கிறத எந்த வாரியமும் கண்டிப்பாக தடுக்க முடியாத நிலை இன்றைய நிலை.
இதற்க்கெல்லாம் வேகமாக தீர்ப்பு சொல்பவர்கள் கூவத்துக்கு ஒரு வழிசெய்ய வேண்டாமா.