உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வக்கீல் உட்பட3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக 11 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக பிரபல ரவுடியின் மனைவியும், அ.தி.மு.க,. திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழக துணை செயலாளரும் வக்கீலுமான மலர்கொடி மற்றும் ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.போலீசார் விசாரணையில் தி.மு.க, வக்கீல் அருளுடன் மலர்க்கொடி தொடர்ச்சியாக தொலை பேசியில் பேசியது தெரியவந்துள்ளது.மேலும் அவரது வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்த போலீசார் அதனடிப்படையில் மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 7 தினங்களாக ஸ்ரீனிவாசன், சுதீஷ் , நரேஷ் என்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துளளனர். இதனையடுத்து இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAJI NATESAN
ஜூலை 18, 2024 01:51

ஆமாம் ஆருத்திரா திருட்டு கூட்டம் யார் அவர்கள் தான்


Jagan (Proud Sangi)
ஜூலை 18, 2024 01:08

நாலு முற்படுத்தப்ட்ட மக்களையும் சேர்த்து சமூகநீதி காக்கவேண்டாமா ? நியாயம் அநியாயம் முக்கியமில்லை சமூகநீதி தான் முக்கியம்


Kasimani Baskaran
ஜூலை 17, 2024 22:26

குற்றவாளிகள் அனைவரும் வேறு வேறு கட்சியில் இருப்பார்கள் - ஏனென்றால் தீம்காவினர் என்றால் காவல்துறைக்கு கைது செய்யவே பயமாக இருக்கும்.


sundarsvpr
ஜூலை 17, 2024 19:39

கொலை கள்ளசாராயம் போன்றவை தனிப்பட்டவர்கள் செய்திடும் குற்றங்கள் என கருத தோன்றவில்லை. பின்பல பிரபலங்கள் இல்லாமல் இருக்காது. ஆளும் கட்சி பிரபலங்கள் மட்டும் கருதமுடியாது. எதிர் கட்சிகள் முக்கியத்தார்கள் நிச்சியம் இருப்பர பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமையால். வீதியில் நடப்பது குடும்பங்களில் நடக்கும் குற்றவாளிகள் தட்டிக்கேட்க தயங்கும் பொதுமக்கள்தான்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ