உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடுப்புக்கட்டையில் கார் மோதி சென்னையை சேர்ந்தவர் பலி

தடுப்புக்கட்டையில் கார் மோதி சென்னையை சேர்ந்தவர் பலி

மயிலம்: மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்புக்கட்டையில் கார் மோதிய விபத்தில், சென்னையை சேர்ந்தவர் உயிரிழந்தார்.சென்னை, அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் அஸ்வின்குமார், 40; இவர், சென்னையில் இருந்து திருச்சிக்கு 'டயோடா இட்டியாஸ்' காரில் நேற்று சென்றுகொண்டிருந்தார். சீட்பெல்ட் அணியவில்லை. மதியம் 12:30 மணியளவில் ஜக்கம்பேட்டை கோர்ட் வளாகம் எதிரே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புக்கட்டையில் மோதியது.இந்த விபத்தில் அஸ்வின்குமார், பலத்த காயமடைந்தார். உடன், அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார்.மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்