உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் ஒழிப்பு அரசு தீவிர ஆலோசனை

போதைப்பொருள் ஒழிப்பு அரசு தீவிர ஆலோசனை

சென்னை:தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக, பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இந்த சூழ்நிலையில், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தார். முதல்வரின் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் அமுதா, நிதித்துறை செயலர் உதயசந்திரன், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், மாநிலம் முழுதும் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

J.V. Iyer
மே 12, 2024 04:16

ஆமாம், இதைவைத்து மாடல் அரசுக்கு எதிராக பேசும் பாஜகவினரை எப்படி சிறையில் தள்ளலாம் என்று தீவிர ஆலோசனைபோலும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை