உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.ஏ., தேர்வு முடிவு: 19.88% பேர் தேர்ச்சி

சி.ஏ., தேர்வு முடிவு: 19.88% பேர் தேர்ச்சி

சென்னை : இந்திய பட்டய கணக்காளர் என்ற சி.ஏ., தேர்வில், 19.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்திய பட்டய கணக்காளர் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ., சார்பில், சி.ஏ., என்ற பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலை தகுதித்தேர்வு, இடைநிலை தேர்வு மற்றும் இறுதி தேர்வு என, மூன்று நிலைகள் நடத்தப்படுகின்றன.இதில், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள், இந்த ஆண்டு மே மாதம் நடந்தன. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.இறுதித்தேர்வில், டில்லியை சேர்ந்த ஷிவம் மிஸ்ரா என்பவர், 83.33 சதவீதம் மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.இறுதித் தேர்வில் முதல் தொகுதியில், 74,887 பேர் பங்கேற்று, 20,479 பேரும்; 2வது தொகுதியில், 58,891 பேர் பங்கேற்றதில், 21,408 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பிரிவுகளிலும், 35,819 பேர் தேர்வு எழுதி, 7,122 பேர், அதாவது, 19.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இடைநிலை தேர்வில் முதல் தொகுதியில், 1.17 லட்சம் பேர் பங்கேற்று, 31,978 பேரும்; 2ம் தொகுதியில், 71,145 பேர் பங்கேற்று, 13,008 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இரண்டு தொகுதியிலும் சேர்த்து, 59,956 பேர் தேர்வு எழுதி, 11,041 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 18.42 சதவீதம். தேர்வு முடிவுகள் குறித்த விபரங்களை, https://www.icai.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ram
ஜூலை 12, 2024 12:02

இன்னும் கொஞ்ச வருடங்களில் இதுவும் இன்ஜினியரிங் படிப்பு மாதிரி போய் விடும் போல, வருடத்திற்கு மூன்று எக்ஸாமினேஷன். CA Firms கொண்டாட்டம் அடிமட்ட ஸ்டிபெண்ட் மூலம் நிறைய ஆட்கள் கிடைப்பார்கள்.


ram
ஜூலை 12, 2024 12:00

இன்னும் கொஞ்ச வருடங்களில் இதுவும் இன்ஜினியரிங் படிப்பு மாதிரி போய் விடும் போல, வருடத்திற்கு மூன்று எக்ஸாமினேஷன். CA Firms கொண்டாட்டம் அடிமட்ட ஸ்டிபெண்ட் மூலம் நிறைய ஆட்கள் கிடைப்பார்கள்.


ram
ஜூலை 12, 2024 12:00

இன்னும் கொஞ்ச வருடங்களில் இதுவும் இன்ஜினியரிங் படிப்பு மாதிரி போய் விடும் போல, வருடத்திற்கு மூன்று எக்ஸாமினேஷன். CA Firms கொண்டாட்டம் அடிமட்ட ஸ்டிபெண்ட் மூலம் நிறைய ஆட்கள் கிடைப்பார்கள்.


Sridhar
ஜூலை 12, 2024 11:19

மேட்டுக்குடி மக்கள் மட்டும் தேர்ச்சிபெறும் வகையில் இந்த தேர்வு இருப்பதால், ஏழை எளிய மாணவர்கள் இதில் நுழைய முடிவதில்லை. எல்லோரும் தேர்ச்சிபெறும் வகையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு சமூக நீதி இதிலும் நிலைநாட்டப்படவேண்டும் என்ற எங்களது கோரிக்கையை... இல்லையில்லை எங்களது எச்சரிக்கையை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்


krishnamurthy
ஜூலை 12, 2024 09:22

அப்படியானால் இந்த தேர்வை எதிர்த்து போராடுவார்களோ


மேலும் செய்திகள்









புதிய வீடியோ