உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : தமிழக கோயில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யக்கோரிய மனுவை தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சாலைகள் வழியாகச் செல்கின்றனர்.பல இடங்களில் சாலைகளின் நடுவில் தடுப்பு இல்லை. வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம் கண்கள் கூசும் அளவிற்கு அதிகம் உள்ளது. பாதயாத்திரை செல்வோர் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர், பட்டையை பயன்படுத்துவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடக்க வேண்டியுள்ளது. பாதயாத்திரை செல்வோர் விபத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர். சாலையின் வலதுபுறமாக செல்ல வேண்டும் என போலீசார் அறிவிப்பு செய்கின்றனர். ஆனால் சாலையின் இடதுபுறமாக செல்கின்றனர். வலதுபுறம் நடந்து செல்ல அறிவுறுத்த வேண்டும்.ஒளிரும் 'ஸ்டிக்கர்'களை பக்தர்களின் உடமைகளில் ஒட்ட வேண்டும். கை மற்றும் தோள்பட்டையில் ஒளிரும் பட்டை அணிய வலியுறுத்த வேண்டும். பக்தர்களுக்கு நடைபாதை அமைக்கும் போது சாலையின் வலதுபுறம் அமைக்க வேண்டும். அதில் வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வண்ணம் பூச நடவடிக்கை கோரி அறநிலையத்துறை கமிஷனர், தமிழக சாலை திட்ட இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுதாகரன்
ஜூன் 15, 2024 12:28

சாலைகள் பஸ், கார், லாரி செல்லும் தடம். பாதசாரிகளுக்கு தனியா வழிபோட்டுக்.குடுங்க. இல்லே பஸ், லாரிகள், கார்கள் சாலைகளில் செல்லத் தடைன்னு சொல்லுங்க.


தத்வமசி
ஜூன் 15, 2024 11:39

இந்தியாவில் பாதசாரிகள் நடந்து செல்ல வேண்டிய இடங்களில் என்னென்ன இருக்கின்றன என்று பாருங்கள். இதற்கு நீதிமன்றம் செல்ல வேண்டாம். அரசியல்வாதிகளும், வியாபாரிகளும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்களும் நல்லது செய்தாலே போதும். நூறு அடி ரோடு போட்டால் ஐம்பது அடியை இவர்களே ஆக்கிரமிக்கின்றனர்.


ديفيد رافائيل
ஜூன் 15, 2024 08:47

இப்ப எல்லாத்துக்குமே court போய் தான் வாங்க வேண்டி இருக்கு, ரொம்ப கொடுமை


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 08:35

கையை உடைக்க, விஐபி கைதிகளை பாதுகாக்கவே காவல்துறைக்கு நேரமில்லை. இதில் கூடுதலாக வேலை கொடுத்தால் வேலை வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள்.


மேலும் செய்திகள்