உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை, திண்டுக்கல், தேனியில் நாளை மழைக்கு வாய்ப்பு

மதுரை, திண்டுக்கல், தேனியில் நாளை மழைக்கு வாய்ப்பு

சென்னை:பருவ காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை முதல் வரும், 13ம் தேதி வரை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைகாற்று வீசலாம்.நாளை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில், பெரும்பாலான மாவட்டங்களில், வரும், 13ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மத்திய, தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் அதைஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இதுவும், வரும், 13 வரை நீடிக்கும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ