உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி நிதி தராமல் வீண்பிடிவாதம்; மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கல்வி நிதி தராமல் வீண்பிடிவாதம்; மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: 'மத்திய பா.ஜ., அரசு தான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழகத்துக்கு கல்வி நிதியைத் தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.அவரது கடிதம்: மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழகம் பிடிவாதமாக இருப்பதால் மத்திய அரசு தர வேண்டிய நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழகம் பிடிவாதமாக இல்லை. தன்னுடைய மொழிக்கொள்கை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறது. மத்திய பா.ஜ., அரசு தான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழகத்துக்கு கல்வி நிதியைத் தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது.

ஆட்சி மொழி

தி.மு.க., அரசு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடக்கிறது. மத்திய பா.ஜ., அரசு அந்த அரசியல் சட்டத்தையே சிதைக்கின்ற வேலையை செய்கிறது. இந்தியாவின் ஆட்சி மொழி அலுவல் மொழியாக ஹிந்தியுடன், இணை ஆட்சிமொழியாக ஆங்கிலமும் இருப்பதால், இந்த நிலை நீடிக்கவேண்டும் என்பதை தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாய்மொழியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, தமிழகம் போட்டுத் தந்த பாதையையே பல மாநிலங்களும் பின்பற்றுகின்றன.

மொழித் திணிப்பு

ஹிந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காத்து நிற்பது திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கை தான். ஹிந்தி பேசும் மாநிலங்களில் எத்தனை பேர் மும்மொழிப் பாடத்திட்டத்தில் பயின்று வருகின்றனர்? அவர்கள் படிக்கின்ற மூன்றாவது மொழி எது? ஹிந்தியைத் தவிர இரண்டாவதாக ஒரு மொழியை சரிவரக்கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் எத்தனை உள்ளன? தமிழகத்தில் மூன்றாவது மொழித் திணிப்புக்கான நியாயமான காரணத்தை மத்திய பா.ஜ., அரசு சொல்லட்டும்.

மாநில சுயாட்சி

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியையும், திறன் மேம்பாட்டையும் மத்திய பா.ஜ., அரசின் அறிக்கைகளே பாராட்டு கின்றன. இதன்பிறகும், மூன்றாவது மொழியைத் தமிழகத்தின் மீது திணிக்க முயற்சிப்பதும், இந்த வல்லாதிக்கப் போக்கை ஏற்க மறுத்தால் நிதி தர முடியாது என மறுப்பதும் தமிழர்கள் மீது பா.ஜ., அரசு திட்டமிட்டு நடத்துகின்ற தாக்குதலாகும். உரிமைகளை நிலைநிறுத்திடும் வகையில், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற நிலையை அடைந்திட பாடுபடுவோம்.

தொகுதி மறுசீரமைப்பு

மாநில உரிமைகளைப் பறிப்பதையே மறைமுகக் கொள்கைத் திட்டமாக கொண்டுள்ள மத்திய பா.ஜ., அரசு, தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென்னிந்திய மாநிலங்களின் லோக்சபா தொகுதிகளைக் குறைத்திடத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிரான முதல் முழக்கத்தை எழுப்பியிருக்கிறது தி.மு.க., அரசு. மாநில உரிமைக் குரலை நசுக்கிவிட போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதையும் செய்வோம். ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Saai Sundharamurthy AVK
மார் 07, 2025 22:26

பொய்யாண்டி ஸ்தாளின் !!! வாய் திறந்தாலே கூவம் நாற்றம் அடிக்கிறது.


M.Mdxb
மார் 07, 2025 16:16

திமுக மனித குலத்துக்கே சாப கேடு கட்டுமரம் அப்புறம் வாரிசு வாரிசு ....................


M.Mdxb
மார் 07, 2025 16:10

இவர் வர வர ரொம்ப காமெடி பண்ணிட்டு இருக்கார் இவரோட சென்ட்ரல் மினிஸ்டர்ஸ் என்ன பண்ணுறாங்க பக்கோடா சாப்பிட்டு தூக்கமா வெட்கமாய் இல்ல பிச்சைக்காரன் மாதிரி தரலை தரலை னு சொல்லிக்கிட்டு சண்டை போட்டு வாங்கு அப்புறம் எதுக்கு வோட்டை போட்டேஓம்


N Sasikumar Yadhav
மார் 07, 2025 15:56

விஞ்ஞானரீதியான ஊழல்வாத கும்பல்களான திராவிட மாடலின் அக்கப்போர் சக்களத்தி சண்டைமாதிரி இருக்கிறது . மத்தியரசு ஆட்டய போட நிதி கொடுக்கவில்லையென ராஜினாமா செய்யுங்கள் திருட்டு திராவிட மாடல் ஆட்சியாளர்களே


SVR
மார் 07, 2025 15:42

மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். இந்த திராவிட அரக்கர்களுக்கு கல்விக்காக உங்கள் பங்கிலிருந்து ஒத்த ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். கல்வியோ மத்திய மற்றும் மாநில அதிகாரங்களில் இருப்பதினால், உங்கள் பங்கு வரியை நீங்கள் எந்த மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த மாநிலத்திற்கு கொடுக்கவும். உங்கள் பங்கு வரியை நீங்களே கொடுத்தால் ஒழிய இந்த திராவிட அரக்கர்கள் அதை கேட்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த திராவிட அரக்கர்களுக்கு கல்விக்காக பணம் வேண்டுமென்றால் புதிய வரியை போடட்டும் அல்லது முன்பே உள்ள வரியை ஏற்றட்டும். மத்திய அரசு எது செய்தாலும் அதை எதிர்த்துக்கொண்டுருக்கிரார்கள். இது கூட்டாட்சி முறைக்கு முரணானது. ஆதலால் திராவிட அரக்கர்களுக்கு எந்த கருணையும் காட்ட வேண்டாம். நீங்கள் பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்களை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்க்கத்தான் போகிறார்கள். உங்கள் அரசை புகழப்போவதில்லை. பணத்தை கொடுத்துவிட்டு இகழ்ச்சியை பெறுவதற்கு பதில், கொடுக்காமலே இருந்து விடலாம். மற்றும் உங்களுக்கு இந்த அரக்கர்களின் தயவும் இந்த அரக்கர்களக்கு உங்கள் தயவும் நாட்டை ஆள தேவையில்லை. இந்த அரக்கர்களை தூக்கி எரியவும்.


MARUTHU PANDIAR
மார் 07, 2025 15:38

இவனுவ மத்திய அரசு எந்த நல்லது செஞ்சாலும் தங்களுக்கு தோதா திரித்துக் கூறி பாமர ஜனங்கள் ஏய்க்கறாங்கன்னா அதுக்கு ஏத்தாப்புல மத்திய அரசும் அவனுவ வாய்க்கு எதாவது ஒரு வகையில அவலை க் கொடுத்துக் கொண்டே இருக்கே இதுக்கு என்ன பண்றது ? கொஞ்ச நாளைக்கு தேர்தல் வரைக்குமாவது இது போன்ற திட்டங்களை நிறுத்தி வைக்கலாம்கறாங்க விவரம் அறிந்தவர்கள் .


sankar
மார் 07, 2025 14:23

பொய் சொல்லாதே மிஸ்டர் - வழக்கமான கல்விநிதி வழங்கப் படுகிறது - இது தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவதற்காக வழங்கப்படும் சிறப்பு நிதி - நீ தேசிய கல்விக்கொள்கை வேண்டாம் என்கிறாய் - அப்புறம் எதுக்கு நிதி - உதயநிதி & இன்பநிதிக்கா


angbu ganesh
மார் 07, 2025 14:21

துணை முதல்வர் இன்னும் டீ ஷிர்ட்டுலதான் அலையறார் அதற்கே டெபுடி சிம் உரித்தான மரியாதை எல்லாம் இல்லை


Satish NMoorthy
மார் 07, 2025 13:40

DMK stoop any low to stay in power. Now that their performance is very poor and the state elections fast approaching they have taken this anti-Hindi agitation to divert the attention of the public


Sridhar
மார் 07, 2025 13:21

இந்த அளவுக்கு அர்த்தம் கெட்டத்தனமா ஒரு ஆளால பேசமுடியுமா? தமிழகத்துக்கே வெட்கக்கேடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை