உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளையாட்டு போட்டியில் பெண்களுக்கு பாலியல் கொடுமையை தடுக்க சட்டம் இயற்றுங்கள்

விளையாட்டு போட்டியில் பெண்களுக்கு பாலியல் கொடுமையை தடுக்க சட்டம் இயற்றுங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தென்மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்த சிறுமி, கபடி வீராங்கனையாக இருந்து வருகிறார். தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்பதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான மாநில போட்டிக்கு அச்சிறுமி தேர்வு செய்யப்பட்டார். வெளியூரில் நடந்த போட்டிக்கு, அவரை உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அழைத்துச் சென்றார். சிறுமியை ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கு பதிந்தனர். போக்சோ சட்டப்படி உடற்கல்வி ஆசிரியருக்கு கீழமை நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையை உயர்த்த, திறமையை தேசத்திற்கு வெளிப்படுத்த, உடற்கல்வி ஆசிரியர் குருவாக, பெற்றோர் போல் செயல்பட்டிருக்க வேண்டும். பெற்றோருடன் பழகும் தன்மையில் இருக்க வேண்டும். ஆசிரியர்களிடமிருந்து உயர்ந்த ஒழுக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் கூலித்தொழிலாளி. சிறுமி பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தார். அவர் சிறந்த கபடி வீராங்கனைகளில் ஒருவர். அவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதியான நபராக இருந்தார். சிறுமியை பாதுகாக்கும் பொறுப்பை எதிர்பார்ப்பு, நம்பிக்கை அடிப்படையில் அவரது தாய் மனுதாரரிடம் ஒப்படைத்தார். பாலியல் வன்கொடுமை மூலம் நம்பிக்கை முற்றிலும் சிதைந்தது.பாதிக்கப்பட்ட சிறுமி மறுத்தபோது, மனுதாரர் தன் கடமையை உணர்ந்து சம்பவத்தை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், அவரது பாலியல் ஆசை சிறுமியிடம் தவறாக நடக்க துாண்டியது.விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு எதிராக விரைவாக செயல்பட்டு, கடும் தண்டனை விதிக்க வேண்டும். இக்குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டனைக்கு உட்படுத்த, நடவடிக்கை எடுக்க புது சட்டம் இயற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது.விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பது தொடர்பான விவகாரத்தில், ஆறு மாதங்களில் தமிழக தலைமை செயலர் தீர்வு காண வேண்டும்.விளையாட்டு போட்டியின் போது, பயிற்சியாளர்கள் மற்றும் அமைப்பாளர்களால் ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தவிர்க்கும் வகையில், ​மாணவியருடன் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குரிய செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்.இச்சம்பவத்திற்கு பின் பாதிக்கப்பட்ட மாணவி படிப்பைத் தொடரவில்லை. விளையாட்டு போட்டியில் பங்கேற்பதையும் நிறுத்திவிட்டார். தகுதி, திறமையுடைய மாணவியின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு கீழமை நீதிமன்றம் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. அதை, 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
செப் 01, 2024 14:23

இந்த கயவர்களின் ஒரு கண்ணை அகற்றி நாக்கை யும் ஆண் உறுப்பை யும் வெட்டி அகற்றி விடலாம்..... இந்த வாழ்நாள் தண்டனை அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து அழித்து விடும்.


ஆரூர் ரங்
செப் 01, 2024 10:55

ஈர வெங்காயம்தான் கற்பு தேவையில்லை எனக் கற்பித்துள்ளாரே. அப்புறமென்ன? வாய்ப்புக்காக எதையும் விட்டுக்கொடுக்க தடையேது?


Kasimani Baskaran
செப் 01, 2024 10:47

லஞ்சத்தை ஒழிப்பது - ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் லஞ்சம் வாங்க ஆள் இருக்காது. அதே போலத்தான் இதுவும். ஆண் பிள்ளைகளை பொறுப்புடன் வளர்த்தால் மட்டுமே பிரச்சினையை தீர்க்க முடியும். தண்டனைக்கு பயந்தவர்கள் கிடையாது.


அப்பாவி
செப் 01, 2024 09:34

என்னத்த சட்டம் போட்டு... இருக்கிற சட்டத்த வெச்செ ஒரு பயல தண்டிக்க துப்பில்லை.


Duruvesan
செப் 01, 2024 08:35

எஜமான் ஒரு எழவும் வேணாம், 3 வது நாள் தூக்கு பொது வெளியில், செஞ்சி பாரு குற்றம் குறையும்


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
செப் 01, 2024 07:13

இழப்பீட்டு தொகையோ மற்ற எதுவுமோ அந்த பெண்ணிற்கு நியாயம் வழங்காது. அந்த பெண்ணின் வாழ்க்கையை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வந்த அந்த கயவானுக்கு மேலும் கடுமையான தண்டனை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்குமாறு வழங்க வேண்டும்.அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மனிதர்களை சற்றேனும் சிந்திக்க தூண்டும்.மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்லியிருக்கின்றனர்.குரு ஸ்தானத்தில் இருப்பவரே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.சிறிய வயதில் இருந்தே நீதி போதனை போதிப்பதில்லை.பள்ளிகளிலும் நீதி போதனை வகுப்பை எடுத்து விட்டனர்.பள்ளி படிக்கும் காலத்திலேயே ஆண் பெண் இரு பாலர்களிடமும் ஒழுக்கத்தை கற்பித்து பாடங்களிலும் இது போன்ற பாடங்களை முறைப்படியாக நல்லபடியாக கற்பிக்கப்பட வேண்டும்.பெண்களும் உடலளவிலும் மனதளவிலும் தைரியத்தை வளர்த்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.வேதனையளிக்கக் கூடிய இது போன்ற விஷயங்கள் எப்பாற்ப் பட்டாவது களையப்பட வேண்டும்.


அஸ்வின்
செப் 01, 2024 06:23

எல்ல இடத்திலும் உள்ளது காலம் காலமாக இதுல போயி என்ன அந்த துறை இந்த துரை 100 நாள் வேலயிலும் உண்டு


சமீபத்திய செய்தி