உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்

சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இடைத்தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் வழங்க 2வது நாளாக ஈரோடு போலீசார் நீலாங்கரைக்கு சென்றுள்ளனர். நடிகை அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு அவரது வீட்டின் முன்பு சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ep0m6smd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்மனை சீமான் வீட்டு ஊழியர்கள் கிழித்த நிலையில், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், சீமான் வீட்டு ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து, வீட்டு முன்பு போலீசார் சம்மன் ஒட்ட வசதியாக தனி போர்டை சீமான் தரப்பினர் வைத்துள்ளனர். தொடர்ந்து, வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்றிரவு சீமான் ஆஜராகினார். இந்த நிலையில், சீமானுக்கு மற்றொரு சம்மனை கொடுப்பதற்காக, ஈரோடு போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பு 2வது நாளாக சென்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வெடிகுண்டு வீசுவேன் என்று வன்முறையை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக புகார் எழுந்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சீமானுக்கு சம்மன் வழங்க நீலாங்கரைக்கு 2வது நாளாக கருங்கல்பாளையம் போலீசார் முகாமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

GANESH
மார் 01, 2025 17:09

விஜயலக்ஷ்மி நல்லவர் போல் தெரியலை காரணம் சம்பவம் நடக்கும் போதே போட்டோ எடுத்து வைத்துள்ளவர் எதோ பணத்திற்காக பல தவறுகளை செய்பவர்தான்


கோமாளி
மார் 01, 2025 16:30

சீமான் 8.2% சதவிகிதம் ஓட்டு வாங்கி மாநில கட்சி அந்தஸ்து பெற்றதும் திராவிஷங்களுக்கு வயிற்றை கலக்குது போல..


Oviya Vijay
மார் 01, 2025 14:07

Vivek, Guna, Dharmavan, Kumar போன்ற ஒரு சில பைத்தியக்காரர்களின் தலையில் களிமண் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்... தங்கள் சொந்த கருத்துகளை எழுதாமல் மற்றவர்கள் கருத்துக்களின் மீது மட்டும் தங்களுடைய வன்மத்தைக் காட்டி நொடிக்கொரு முறை தாங்கள் ஒரு மட சாம்பிராணி என்பதை இங்கே நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்... சுயமாக சிந்தித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். மற்றவர் கருத்துக்கள் மீது உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை விடுத்து உங்கள் சொந்தக் கருத்தை பதிவிடுங்கள். உங்கள் மண்டையில் ஒரு சரக்கும் இல்லை என்பதை குறுக்கே மறுக்கே ஓடி வந்து வெளிப்படுத்தாதீர்கள். அனைவருக்கும் அவரவர் கருத்துக்களை சொல்ல இங்கே உரிமை உண்டு. நீங்கள் எதிர்பார்ப்பதைத் தான் மற்றவர்களும் தங்கள் கருத்தாக தெரிவிக்க வேண்டுமென எந்த அவசியமும் இல்லை. பலமுறை சொல்லியும் திருந்தாத இது போன்ற சங்கிகளை என்னவென்று சொல்வது... காலந்தாழ்த்தாமல் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகுவது சிறந்தது.


Murthy
மார் 01, 2025 12:10

கஞ்சா போதைமருந்து கடத்தல் நபருடன் தொடர்பில் இருந்த உதயநிதி ஸ்டாலின் இருவரையும் இதுவரை விசாரிக்காதது ஏன்?? இதுதான் பிஜேபி திமுக கள்ள உறவு ......


Oviya Vijay
மார் 01, 2025 11:45

இங்கே சீமானுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிடும் நபர்களைப் பார்க்கும் போது இந்த சமுதாயம் எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என நினைக்கையில் மிகவும் கேவலமாக உள்ளது... இது போன்றோர் தன் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் இவ்வாறு நேர்ந்திருந்தால் கூட இப்படித் தான் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாகப் பேசுவார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது... திருமணம் செய்து கொள்வதாகக் கூறிதான் தன்னோடு உறவு கொண்டார் என்பது தான் விஜயலக்ஷ்மி சீமான் மீது வைக்கும் குற்றச்சாட்டு. சீமான் சொல்வது பணத்திற்காகத் தான் நடிகையே தானாக விரும்பி வந்தார் என்று... தன் மீதான குற்றச்சாட்டை திசை திருப்பும் வகையில் சீமான் பேசும்போது திமுகவை தன்னைப் போல் தேர்தலில் தனியாக போட்டியிட முடியுமா? கருணாநிதி மகனுக்கும் பிரபாகரன் மகனுக்கும் போட்டி வைத்து பார்த்து விடலாமா? என்றெல்லாம் பேசுகையில் ஒரு கட்சித் தலைவனின் லட்சணம் இது தானா எனத் தோன்றுகிறது... இதற்கு சந்தன கடத்தல் வீர்ப்பனின் மகள் வேறு சப்போர்ட்... வீரப்பனோ அல்லது பிரபாகரனோ தன் குழுவில் எவரேனும் பெண்கள் விஷயத்தில் தவறாக நடந்து கொண்டால் உடனே கடுமையான தண்டனை வழங்குவர் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அப்பேற்பட்ட ஒரு தலைவனின் மகன் என்று தன்னை கூறிக்கொள்ள சீமானுக்கு எந்த அருகதையும் இல்லை... தன் மீது குற்றம் சுமத்தும் நடிகை தனது திருமணத்தை வந்து தடுத்து நிறுத்தி இருக்கலாமே என்று போங்கு கதை பேசும் சீமான் தன்னை ஒரு நடிகையோ எந்த ஒரு பெண்ணோ பணத்திற்காக விரும்பி வந்து உறவு வைத்து கொள்ள வருகிறார் என்றால் ஏன் இது தவறு என்று அறிவுரை கூறி திருப்ப அனுப்ப உங்களால் முடியாதா???... ஒரு தலைவனுக்கு அது தானே அழகு... ஆக எத்தனை பெண்கள் பணம் எதிர்பார்த்து உங்களை அணுகினாலும் அவர்கள் அனைவருடனும் உறவு கொள்ளத் தயங்க மாட்டீர்கள்... அப்படித் தானே? பாலியல் குற்றவாளியான இவருக்கு முட்டுக் கொடுக்க ஒரு கூட்டம்... விஜயலக்ஷ்மி சொல்வது போல ஒரு நாள் அவரின் சாபம் இவரை வந்தடையும்... ஆடி அடங்கும் வாழ்க்கையடா... அது சீமானுக்கும் பொருந்தும்...


sridhar
மார் 01, 2025 13:43

யாரோ ஒரு அயோக்கியன் ‘ சந்தோஷமாக ‘ இருந்து விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டானாம் , 70 வருஷம் முன்னாடி .


vivek
மார் 01, 2025 13:52

ஏம்பா திமிங்கலம்....இந்த வேகத்தை அண்ணா கல்லூரி சார் மீது காட்டவில்லயே...


raja
மார் 01, 2025 17:44

அட உடன் பிறப்பே நீ நது தளபதி மிஸ்ஸால் மிசாவில் கைதானபொதும் டீவி நடிகை பின்னால் சுற்றிய போதும் இப்படி எழுத வில்லை... அது போகட்டும் சின்னவன் நடிகைக்கான பாலிடாயில் குடித்த போதும் எதுவும் சொல்லவில்லையே...


madhes
மார் 01, 2025 11:28

யாருன்னே ஹெரியாதுனு சொன்ன மகன், இப்போ 6 மாசம் 7 மாசம் தொடர்பு மற்றும் உடல் உறவு னு சொல்றான், இந்த மகனுக்கு ஓட்டுப்போட்டு தற்குறி தம்பிகளின் ஆல்வா குடுப்பான்,


raghavan
மார் 01, 2025 11:20

அய்யோ கொடுமை சம்மன் என்பது ஆங்கில வார்த்தை. அழைப்பாணை என்று தானே எழுதி இருக்க வேண்டும்.


hariharan
மார் 01, 2025 10:43

suggestion to seeman, Take this opurtunity to reach people every city you can meet people and talk abou this DMK govt activites. so that people will understand.


Sidharth
மார் 01, 2025 13:27

LET HIM TALK ABOUT HIS SEUAL ENCOUNTERS WITH AN UNMARRIED WOMAN WITH A PROMISE TO MARRY IN THE COURT FIRST.


சிந்தனை
மார் 01, 2025 10:18

கோவையில் பல வெடிகுண்டு வைத்து செய்த வனுக்கு புகழ்மாலை... ஊர்வலம்... போலிலீஸ் பாதுகாப்பு....


ராமகிருஷ்ணன்
மார் 01, 2025 09:35

திமுக மட்டும் சீமாண்டி வாயை அடைக்க இந்த மாதிரியான போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், மத்திய அரசு திமுகவின் வாயை அடக்க ED யை ஏவக் கூடாதா. உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா. என்னாங்கடா நியாயம்.


kalinga prakash
மார் 03, 2025 14:13

அட அரைவேக்காடு நடவடிக்கை எடுக்க சொன்னது திமுக அல்ல,உயர்நீதிமன்றம்