உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 56 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 20 சதவீதம் தான் தேர்ச்சி

56 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 20 சதவீதம் தான் தேர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 56 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.அண்ணா பல்கலையின் இணைப்பில், 400க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 310 கல்லுாரிகள் தன்னாட்சி அந்தஸ்து இன்றி, அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை வழியே செமஸ்டர் தேர்வுகளை நடத்துகின்றன. இந்த கல்லுாரிகளில், கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களின் செமஸ்டர் தேர்வுகளின் இறுதியில், தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதத்தை, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ளது.இதன்படி, இரு கல்லுாரிகளில், 90 சதவீதத்துக்கும் மேலான மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆறு கல்லுாரிகளில், 80 முதல், 90 சதவீதம் வரையிலும்; 46 கல்லுாரிகளில், 60 முதல் 80 சதவீதம் வரையிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும், 101 கல்லுாரிகளில், 40 சதவீதம் முதல், 60 சதவீதம் வரையிலும்; 97 கல்லுாரிகளில், 20 முதல், 40 சதவீதம் வரையிலும் தேர்ச்சி கிடைத்துள்ளன. 32 கல்லுாரிகளில், 10 முதல், 20 சதவீதம் வரையிலும்; 24 கல்லுாரிகளில், 1 முதல், 10 சதவீதம் வரையிலும் தேர்ச்சி கிடைத்துள்ளன. இரு கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ள நிலையில், கல்லுாரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, மற்ற மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கல்லுாரி தேர்ச்சி விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

A.Muralidaran
மே 12, 2024 09:50

முன்பு அப்ளை பண்ணுவதற்கே சதவீதம் மினிமம் மார்க் இருத்தல் அவசியம் இன்றைய நிலையில் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகம் அப்ளை பண்ணுவதற்கு பாஸ் பண்ணினால் போதும் என்றாகிவிட்டது அப்புறம் தரம் எப்படி அடைவது


adalarasan
மே 10, 2024 22:17

POKIRA POKKAI PAARTHAL, THAMIZH NAATTIL ULLOOR,,,,ENGINEERS KKUM THATTUPADUTHAN[LABOUR SHORTAGE POLA, VADAKKE IRUTHUTHAN VARANUM,NALL SAMACHEER KALVI ELLORUKKUM, PALLIYIL,, % MAL PADIPPIL, FAIL??


தத்வமசி
மே 10, 2024 19:40

பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பிலே மதிப்பெண்களை அள்ளி போட்டால் மேல் படிப்பில் இப்படித்தான் கோட்டை விடுவார்கள் மனதை ஒருமுகப்படுத்துதல் மிகவும் அவசியம் கல்வியில் அரசியல் தலையீடு கூடாது அரசியல்வாதிகள் கல்வியில் தலையிடாமல் தள்ளி இருந்தால் தமிழகத்தின் கல்வித்தரம் கூடும் இல்லை அதலபாதாளத்தில் சென்று விடும் இப்போது தமிழக மாணவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் படிப்புகளில் தேர்ச்சி பெறுவதில்லை காரணம் கல்வியில் அரசியல் கலப்பே நீட் பற்றி வாய்க்கு வந்தபடி பேசவேண்டியது தாங்கள் கல்லா கட்ட எதையும் பேசலாம் என்கிற நினைப்பு தான் கல்வியின் தரத்தை வீணடிக்கிறது


தாமரை மலர்கிறது
மே 10, 2024 19:03

கோட்டாவில் பாஸ் மார்க் எடுத்தவர்களுக்கு சீட் கொடுத்தால், அவர்களால் படிக்க முடியாது அதிக எடைகொண்டவரை ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக ஓட அனுமதிக்கலாம் ஆனால் அவர்களால் வெற்றி பெறமுடியாது


ஆரூர் ரங்
மே 10, 2024 17:20

எண்பது சதவீத நேரத்தை சினிமா டிவி, ஆன்லைன் விளையாட்டுக்களில் வீணடிக்கும் மாணவர்களே அதிகம். அதுவும் அரசு ஸ்காலர்ஷிப்புடன்.


அப்புசாமி
மே 10, 2024 17:05

இஞ்சினீரிங் தேர்வு இருக்கக் கூடாது. ஆல்பாஸ் போட்டு 100 சதவிகித தேர்ச்சி பெறணும்.


Duruvesan
மே 10, 2024 16:32

மனம் தளர வேண்டாம் ,இனி பாஸ் மார்க் ல கோட்டா கொண்டு வந்து உங்க எல்லோருக்கும் விடியல் விடிவு தருவார்


Duruvesan
மே 10, 2024 16:29

விடியலு இதுக்கு தான் நீட் மற்றும் எந்த தேர்வும் வேணாமுன்னு சொல்றது ,எவன்டா கேட்கறீங்க


Rengaraj
மே 10, 2024 14:52

ஹையர் செகண்டரி பள்ளி இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களும் பொறியியலில் தேர்ச்சி பெறுவதற்கு கஷ்டப்படுகின்றனர் காரணம் லாஜிக்கல் திங்கிங் எனப்படும் திறமை மாணவர்களுக்கு குறைந்துவருவதே உயர்கல்வியில் பிராக்டிகல் ஆக விஷயங்களை அணுகும் திறமை வேண்டும் கேள்விகள் அனைத்தும் புத்தகத்தில் இருந்து அப்படியே வராது ஒருசில கேள்விகளுக்கு நடைமுறையில் தீர்வுகளை சொல்லும் திறமையை எதிர்பார்ப்பார்கள் அதற்கு மாணவர்கள் புத்தகத்தை தாண்டி நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் அவர்கள் மட்டுமே படித்து முடித்தபின் தங்களுக்கு கிடைக்கும் வேலையில் தங்கள் திறமையை காட்டமுடியும் அப்படிப்பட்ட மாணவர்களை மட்டுமே நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ள விரும்பும்


Sivakuamar Panneerselvam
மே 10, 2024 13:57

கல்லூரி விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் நிலையில், அதனை பார்த்து ஏமாறும் பெற்றோர்களும் மாணவர்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள். இந்நிலையில் எந்த கல்லூரியில் தேர்ச்சி சதவிகிதம் வெளியிடும் போது கல்லூரியின் பெயர்களும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். அப்போதுதான் நல்ல பயிற்சியளிக்கும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பார்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி