உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து ரகசிய பயிற்சி: 6 பேரிடம் விசாரணை

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து ரகசிய பயிற்சி: 6 பேரிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரகசிய பயிற்சி மையம் நடத்தி, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக, கெமிக்கல் இன்ஜினியர் உட்பட ஆறு பேரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹமீது உசேன்; கெமிக்கல் இன்ஜினியர். சென்னை அண்ணா பல்கலையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவரின் தந்தை அகமது மன்சூர், இளைய சகோதரர் அப்துல் ரஹ்மான். மூவரும், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளனர்.இதற்கு, செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது மவுரிஸ், சேலையூர் காதர் நவாஸ் ஷெரிப், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அகமது அலி உமரி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். ஆறு பேரும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.அவர்கள் வகுத்து தந்த சதித் திட்டத்தின்படி செயல்பட்டுள்ளனர். ஆறு பேரையும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின், இந்த வழக்கு, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.அவர்கள், தஞ்சாவூர், திருச்சி என, பல மாவட்டங்களில் ஹமீது உசேன் கூட்டாளிகள் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதன் அடிப்படையில் ஆறு பேரையும், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆறு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.அவர்களிடம், சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான்கான் தெருவில், 'மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்' என்ற பெயரில் ரகசிய பயிற்சி மையம் நடத்தியது பற்றியும், அங்கு வெடிகுண்டு தயாரிப்பு, ஆயுதப் பயிற்சி அளித்தது குறித்தும் விசாரித்து வருகின்றனர். ஹமீது உசேன் கூட்டாளிகள், கரூரிலும் ரகசிய பயிற்சி மையம் நடத்தியது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
ஆக 24, 2024 10:23

100 தீவிரவாதிகளை கொல்வதற்கு பதில் ....அவர்களை உருவாக்கும் இவர்களை போன்ற 4 பேரை சுட்டு கொன்றால் போதும் ....இவர்கள் நாட்டுக்கு பாரம்.


அன்பு
ஆக 24, 2024 16:49

உலகுக்கே பாரம்


Barakat Ali
ஆக 24, 2024 07:38

சிறுபான்மையினரை பெரும்பான்மையர் அச்சத்துடன் நோக்கும் நிலைமை உருவாகிவிட்டது ......


Gopal
ஆக 24, 2024 07:20

இந்த மாதிரி தடுதலைகளை எல்லாம் நாடு கடத்தி பங்களாதேஷுக்கு அனுப்ப வேண்டியதுதானே ? இவங்களை விசாரணை பண்ணி டைம் வேஸ்ட் பண்ணவேண்டாமே. இவங்கல்லால் நாட்டுக்கு ஆபத்து தானே தவிர ஒரு பிரயோஜனமும் இல்லை. முடிந்தால் என்கவுண்டர் பண்ணி போட்டு தள்ள வேண்டியதுதான்.


Kasimani Baskaran
ஆக 24, 2024 06:23

தமிழகம் அமைதிப்பூங்காதான். கண்டிப்பாக நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவர்கள் இரத்தம் கக்கி துடிதுடித்து சாவார்கள்...


அன்பு
ஆக 24, 2024 16:52

நம்பாதவர்கள் சங்கிகள்.


சமீபத்திய செய்தி