உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாரின் செயல் ரொம்ப மோசம்; மார்க்சிஸ்ட் கண்டனம்

போலீசாரின் செயல் ரொம்ப மோசம்; மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: 'திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தலையிட்ட பிறகும், மாதர் சங்க மாவட்ட தலைவர் பாப்பாத்தியை விடுவிக்க மறுத்து போலீசார் தகராறு செய்தது மிக மோசமான செயலாகும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கி குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும், போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும், கல்வி நிலையங்களில் பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்ற அமர்வை நடத்த வேண்டும், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சென்னையில் நேற்று பேரணி நடத்தியது. மாதர் சங்கம் நடத்திய பேரணிக்கு மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. மாதர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.போலீசாரின் அனுமதியுடன் நடைபெற்ற பேரணிக்கு மாநிலம் முழுவதிலும் இருந்தும் பெண்கள் சென்னைக்கு வந்தனர். அந்த முறையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாப்பாத்தி சென்னை பேரணியில் கலந்து கொள்ள புறப்பட்ட போது, எவ்வித வழக்கோ, நீதிமன்ற உத்தரவோ இல்லாமல் அவரை திண்டுக்கல் மாவட்டபோலீசார் வீட்டு காவலில் வைத்தது வன்மையான கண்டனத்திற்குரியது. எம்.பி., சச்சிதானந்தம் தலையிட்ட பிறகும், பாப்பாத்தியை விடுவிக்க மறுத்து போலீசார் தகராறு செய்தது மிக மோசமான செயலாகும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Perumal Pillai
மார் 01, 2025 22:43

28 பெப்ரவரி அன்று வரவேண்டிய Top up 01 மார்ச் ஆகியும் வரவில்லை போலும் .


T.Senthilsigamani
மார் 01, 2025 20:32

அடேங்கப்பா மார்க்சிஸ்ட் கட்சிகளின் வீரத்தை நினைத்தாலே புல்லரிக்கிறது .காவல் துறையின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் . இது தெரியாமல் ஏதோ காவல் துறை எடுத்த முடிவு என காவல் துறையை குறை கூறுகிறார் . கோடிகளுக்கு அடிமையாகி கம்யூனிஸ்ட்கள் கொள்கைகளை திமுகவிடம் அடகு வைத்ததை அனைவரும் அறிவர் .யாரை ஏமாற்ற இந்த நாடகம்


GMM
மார் 01, 2025 19:30

திராவிட சுயாட்சியில் ? அரசு போலீஸ் அரசியல் போலீசாக மாறி விட்டது. போலீஸ் துப்பாக்கி, லத்தி, விசில் ... வைத்து இருக்காது. போலீஸ் கவர்னர் பிரதிநிதி , கலெக்டர் , தாசில்தார் ... போன்ற அரசு அதிகாரிகள் கீழ் தான் பணி ஒதுக்கீடு பெற வேண்டும். சம்பளம் பெற இவர்கள் ஒப்புதல் தேவை. தற்போது ஆளும் கட்சிக்கு சாதக குற்ற பத்திரிகை தயாரித்தல் , நீதிமன்றம் செலுத்தல் .. போன்ற கிளார்க் வேலை தான் செய்கின்றனர். வழக்கினால் வக்கீல் வருவாய் அதிகரிப்பதால், நீதிபதிகள் கண்டு கொள்வது இல்லை. இதனால் போலீஸ் செயல் மோசமடைகிறது. அரசு அதிகாரி/டாக்டர் இல்லாமல் போலீஸ் தனியாக முதல் கட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. போலீஸ் பணி கண்காணிக்க மாநில அரசு துறையில் ஒரு பிரிவு அலுவலகம் இருக்க வேண்டும்.


Visu
மார் 01, 2025 17:48

25 ஐ 250 ஆக்க பாக்கிறீங்க பாத்து உங்கள முன்னாள் ஆக்கிட போறாங்க


Samy Chinnathambi
மார் 01, 2025 17:01

கம்ம்யூனிஸ்டுகள் கோடிகளுக்கு விலை போய் கட்சியை அடகு வைத்து சும்மா கண்டிப்பது போல பாவ்லா காட்டுவார்கள்..மோசமான ஆட்சி நடந்தாலும் நாங்கள் ஆதரவு தருவோம் என்று கூச்சம் இல்லாமல் பேட்டி கொடுப்பார்கள்... காவல் துறை மோசமாக செயல்படுகிறது என்றால் காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் லாயக்கு இல்லை என்று தான் அர்த்தம்.......


Nagarajan D
மார் 01, 2025 16:31

கூட்டணியிலிருக்கும் உண்டியல் கரடியே காரி துப்பி விட்டது... இன்னும் என்ன மானம் வேண்டி கெடுக்கு இந்த திரவிடா திருடனுங்களுக்கு


Krishnamurthy Venkatesan
மார் 01, 2025 16:16

நம்மைவிட ஒருவன் புத்திசாலியாக இருப்பதையோ அறிவுடன் பேசுவதையோ உபி ஸ் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை இங்கு பதிவு செய்துள்ள 200 கட்டிங் பிரியாணி உபி ஸ் அவர் கேட்கும் கேள்விகளை மும்மொழி, தமது தலைவர்களிடமோ அல்லது பள்ளிக்கூடம் நடத்துபவர்களையோ கேட்க திராணியற்று இருக்கிறார்கள்.


Kjp
மார் 01, 2025 15:57

கம்மிகள கோடிக்குள் அடக்கம்.பல்டி அடிப்பதில் கைதேர்ந்தவர்கள்.


மால
மார் 01, 2025 15:32

நீ பேச லாயக் கில்லாதவன்


Jay
மார் 01, 2025 15:19

இந்தியா முழுவதும் துடைத்து எறியப்பட்ட, இந்த லெட்டர் பேடு கட்சி தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை