உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தே பாரத் ஹவுஸ் புல்

வந்தே பாரத் ஹவுஸ் புல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாட்டில் இயக்கப்படும் 102 வந்தே பாரத் ரயில் சேவைகளில், சராசரியாக பயணியர் கூட்டம், 105 சதவீதமாக உள்ளது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 102 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை - மைசூரு, எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை -- விஜயவாடா, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பம், கூடுதல் வசதிகள் கொண்ட இந்த ரயில்களுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பெரும்பாலானநேரங்களில் வந்தேபாரத் ரயில்களில் பயணியர் கூட்டம் முழுமையாக காணப்படுகிறது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும், 102 வந்தே பாரத் ரயில்களில், சராசரியாக பயணியர் கூட்டம், 105.7 சதவீதமாக இருக்கிறது. 2023 ஏப்., முதல் கடந்த மார்ச் வரையில், 18,423 வந்தே பாரத் ரயில், 'டிரிப்'கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் 1 கோடியே 24 லட்சத்து, 87,540 கி.மீ., துாரம் இயக்கப்பட்டுள்ளன. கேரளாவில் வந்தே பாரத் ரயிலில் பயணியர் கூட்டம் அதிகபட்சமாக, 175.3 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ruthirapathy ram
ஜூன் 11, 2024 11:55

தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை இருந்தால் நன்றாக இருக்கும்.


Ethiraj
ஜூன் 07, 2024 16:31

Indirect way of increasing train fare Our lower class fare to be increased by 25 % . Then only they will not be reduced


D Janakiraman
ஜூன் 06, 2024 19:30

Madurai to Bangalore need of the hour.


Ramesh Sargam
ஜூன் 06, 2024 12:27

ஆனால், கிருஷ்ணராஜபுரம் பெங்களூரு ரயில் நிலையம் மற்றும் பல நிலையங்கள் இந்தியாவில் மிக மிக அசிங்கமாக உள்ளது. வசதிகள் சுத்தமாக இல்லை. பிரயாணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. அவைகள் எல்லாம் என்று புனரமைக்கப்படுமோ... ???


Bye Pass
ஜூன் 09, 2024 14:46

காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் இந்த ஆசை இருந்ததில்லையா


Janarthanan
ஜூன் 06, 2024 10:53

ஸ்டுபிட்


Janarthanan
ஜூன் 06, 2024 10:49

மோடி அரசு திட்டமிட்டு சாதாரண ரயில்களில் ஸ்லீப்பர் கோச்சிகளை குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக நெரிச்சல் அதிகமாகி மக்கள் வழியின்றி கூடுதல் கட்டணத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கிறார்கள்??


Rajamani
ஜூன் 06, 2024 06:41

why no Vande barath train or any new day train to Secunderabad or Hyderabad from Chennai. It is a must and any reason for neglecting this route


skanda kumar
ஜூன் 06, 2024 07:24

டாஸ்மாக் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு இல்லையா என்று பார்க்க வேண்டும்


Kumar Kumzi
ஜூன் 06, 2024 10:38

இது என்னடா திராவிஷா மாடல் இங்கிலீசா இருக்கு


மேலும் செய்திகள்







புதிய வீடியோ