உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்க பஸ்களை இங்க ஓட விட மாட்டோம்: தமிழக அரசுக்கு கேரள அமைச்சர் எச்சரிக்கை

உங்க பஸ்களை இங்க ஓட விட மாட்டோம்: தமிழக அரசுக்கு கேரள அமைச்சர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் இயக்கப்படும் கேரள ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்தால், கேரளாவுக்கு வரும் தமிழக ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்வோம்' என, அம்மாநில போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.தமிழத்தில் பிற மாநில பதிவு எண் உடைய ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என, போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும், விதிகளை மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் உடைய ஆம்னி பஸ்கள் மீது, நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது.இந்த சூழ்நிலையில், வெளிமாநில பதிவெண் உடைய ஆம்னி பஸ்கள், தமிழகத்தில் இயங்குவதற்கு தடை விதிக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், கேரள ஆம்னி பஸ்களுக்கு தமிழகத்தில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கேரளா அரசு புகார் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், கடந்த நவ., 1 முதல், இருக்கைக்கு 4,000 ரூபாய் வீதம் காலாண்டு வரி கேரளா பஸ்களுக்கு உயர்த்தப்பட்டது குறித்து, அம்மாநில சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது, அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பேசியுள்ளதாவது:நம்மிடம் ஆலோசிக்காமல் தமிழக அரசு தொகையை ஒரே கட்டமாக, 4,000 ரூபாய் அதிகரித்துள்ளது. தமிழக அதிகாரிகளிடம் பேசியும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியானால் இருக்கட்டும், நாமும், 4,000 ரூபாய் அதிகரிக்கலாம்; சபரிமலை சீசன் வர உள்ளது.தமிழகத்தில் இருந்து தான் அதிகமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். நாங்கள் எங்கள் கஜானாவில் பணத்தை நிறைப்போம். இங்கிருந்து செல்பவர்களை அங்கு தொந்தரவு செய்தால், அங்கிருந்து வருபவர்களை நாங்கள் இங்கு தொந்தரவு செய்வோம். கேரள பஸ்களை அவர்கள் பறிமுதல் செய்தால், தமிழக பஸ்களை நாங்கள் இங்கு பறிமுதல் செய்வோம்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.இதுகுறித்து, தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் ஆம்னி பஸ்களை இயக்க, தமிழக போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள, 500க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில், 200க்கும் மேற்பட்ட பஸ்களை, தமிழகத்தில் பதிவு செய்து இயக்கி வருகிறோம்.இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால், அந்த பஸ்களை நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் சாலை வரியும் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.இதற்கு, தற்போது கேரள போக்குவரத்து துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால், மற்ற அண்டை மாநிலங்களும் தமிழக ஆம்னி பஸ்களுக்கு நெருக்கடி தரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramachandran V
ஜூன் 30, 2024 16:58

எதிர் வினை வரும் என்று தெரிந்தே ஆணை போட்டால் என்ன செய்வது?


subramanian
ஜூன் 29, 2024 15:22

ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் இப்படி ஒரு அறிக்கையை விடமுடியுமா.? அந்நிய கைக்கூலி நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு வாழை குழைக்கும் .


Ram pollachi
ஜூன் 29, 2024 14:07

சிறுவாணி, முல்லை பெரியார் நீரை தடுத்து நிறுத்தியது போல் தமிழகத்திலிருந்து வரும் சாலை பேருந்து, இரயில் மற்றும் விமான போக்குவரத்தை நிறுத்தி பார் பார்க்கலாம். உழைக்காமல் சுற்றுலா, மது மற்றும் லாட்டரியை நம்பி காலத்தை ஓட்டுவது கடினம்.


Kumar Kumzi
ஜூன் 29, 2024 12:07

யோசித்து பாருங்கள் புள்ளி கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கும் நல்ல நேரம் கடவுள் காப்பாற்றிவிட்டார்


krishnan
ஜூன் 29, 2024 11:15

போக்கு வரத்து துறை தமிழ்நாட்டில் உருப்படியா ஏதும் செய்யாது ..ஆம்னி கொள்ளை யை நிறுத்தாது .


தமிழ்வேள்
ஜூன் 29, 2024 11:08

ஆம்னி பஸ்களை , வரையறுக்க பட்ட ரூட் களில் நேர அட்டவணைப்படி இயங்குவதே தவறு ...டூரிஸ்ட் பெர்மிட் இருந்தால் குழுவாக குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே பயணம் / சுற்றுலா செல்ல இயலும் தவிர , ஆன்லைன் ஆப் லைனில் டிக்கெட் வழங்க இயலாது ... அப்படி டிக்கெட் கட்டணம் வசூலில்த்தால் , அது ஸ்டேஜ் கேரியர் வகையில் வரும் . பர்மிட் தேவை ..அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்க இயலும் .. பெரும்பாலும் எம்பி எம் எல் ஏக்களின் பினாமி பஸ்களாக இருப்பதால் , கம்மிகளுக்கும் கட்டிங் வழங்கி சேவையை தொடர வாய்ப்புகள் அதிகம்


Minimole P C
ஜூன் 29, 2024 08:10

For dravidian parties even if they sell entire TN and got the money, is not sufficient to them.After that also they think of looting new areas. Generally TN Govt is the trendsetters of looting for whole India. In this case also they want, bus owners of other state registrations to loot. For that they stage the drama of revenue loss. First they plug the loopholes of revenue loss of transport department.


Kasimani Baskaran
ஜூன் 29, 2024 08:05

வண்டிகள் ஓட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


SWAMINATHAN
ஜூன் 29, 2024 07:36

கேரளமும் திராவிட நாட்டுக்குள்ளே தானே வருகிறது ஆஹா இதென்னே சோதனை


விஜய்
ஜூன் 29, 2024 07:08

கருமம் காலத்தின் கொடுமை இந்த அரசு


மேலும் செய்திகள்