உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாக் அப்பில் 4 பேர் இறப்பா? இல்லை என்கிறது காவல் துறை

லாக் அப்பில் 4 பேர் இறப்பா? இல்லை என்கிறது காவல் துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'காவல் நிலைய விசாரணையில் மரணங்கள் நிகழவில்லை' என, போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.தமிழகத்தில் ஏப்ரல் 5 - 12 வரை, போலீசாரின் காவல் விசாரணையில், நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மதிச்சியம் போலீசார், ரவுடி கார்த்திக்கை, 32, ஏப்., 2ல் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மறுநாள் உடல் நலக்குறைவு காரணமாக, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு நாள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்தார்விழுப்புரம் தாலுகா போலீசார், ஏப்., 10ல், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற வழக்கில், சாராய வியாபாரி ராஜாவை, 43, கைது செய்து, பின், காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். அவர் மீது ஏற்கனவே சாராய வழக்குகள் உள்ளன. வீட்டிற்கு சென்ற பின், நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரது மனைவி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். டாக்டர்களின் பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரியவந்ததுதுாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், வழக்கு ஒன்றில் சிவகாசியைச் சேர்ந்த ஜெயகுமாரை, 60, கைது செய்து, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். காசநோய் காரணமாக பாளையக்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மூச்சுத்திணறல் இருப்பதாக கூறியதால், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் வரும் வழியில் உயிரிழந்தது தெரியவந்ததுஆவடி கமிஷனர் அலுவலகத்தின் செவ்வாய்பேட்டை போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த ரவுடி சாந்தகுமார், 30; அவரது கூட்டாளிகள், ஆறு பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. விசாரணையின் போது, சாந்தகுமார் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.பிரேத பரிசோதனையில் அவருக்கு, இதயத்தில், 90 சதவீதம் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அலட்சியமாக இருந்தது தொடர்பாக, இன்ஸ்பெக்டரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். நான்கு சம்பவங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. காவல் துறையை குறைகூறும் வகையில், எவ்வித காவல் விசாரணை மரணங்களும் நடக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kanns
மே 13, 2024 18:13

Simply Suspend Concerned Inspector & SIs pending Unbiased Investigations-Murder Trial


Svs Yaadum oore
மே 13, 2024 07:24

மூச்சுத்திணறல், இதயத்தில், சதவீதம் அடைப்பு, காசநோய் என்று இவைகள்தான் தான் காரணம் லாக் அப் மரணங்கள் இந்த ஆட்சியில் தொடர்கதை ஆனால் இதே போன்ற சில மரணங்கள் எடப்பாடி ஆட்சியில் நடந்தபோது அரசு போலீஸ் தான் காரணம் என்று ஊளையிட்டவங்க எவரும் இப்போது காணவில்லை


Kasimani Baskaran
மே 13, 2024 05:34

லாக்கப்புக்கு வெளியே மரணம் அதை எப்படி சிறைத்துறை லாக்கப் மரணம் என்று வகைப்படுத்தும் கார் மோதுவது, கால் ஒடிவது, கை ஒடிவது போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது


ராஜ்68
மே 13, 2024 04:09

அஹா நீங்கள் adikave இல்லை. உங்கள் மன சாட்சி யை thottu சொல்லுங்கள். நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தாலும் கைது செய்து துன்புறுத்துவோம். அப்படித்தானே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை