உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூலை 25ம் தேதி முதல் 100 நாட்கள் நடைபயணம்: அன்புமணி அறிவிப்பு

ஜூலை 25ம் தேதி முதல் 100 நாட்கள் நடைபயணம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: ஜூலை 25ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதை விட, நல்லாட்சி வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தான் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அதன் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற வழக்கால் ஆபத்துக்குள்ளாகியிருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது, பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள் தொகை மற்றும் சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட சமூகநீதிக் கடமைகளை குழி தோண்டி புதைக்கிறது திராவிட மாடல் அரசு.பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. கல்வி சேவையாக இருந்த நிலை மாறி கொள்ளையாக மாறி விட்டது. மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் தான் அனைத்து வகையான சமூகக் கேடுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று தெரிந்தும் கூட அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜூலை 25ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்கிறோம். இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கவுள்ளது.தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஓர் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழக மக்களின் நலனுக்கானது. எனவே. உன்னத நோக்கம் கொண்ட இந்தப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ராஜா
ஜூன் 16, 2025 00:35

மாம்பழமும் அழகி விட்டது போல இருக்கு யாருக்கும் பயன் படாது


Oviya vijay
ஜூன் 14, 2025 10:05

இங்கே கருத்து போடும் மானஸ்தன் பூராம் காலம் காலமா மாடல் க்கு அடிமைகள்...200 க்கு எப்டி எல்லாம் கம்பி கட்டுகிறார்...


Thiyagarajan S
ஜூன் 14, 2025 06:53

பாவம் இந்த வன்னிய மக்கள்..... பேராசை பிடித்த பெட்டி வாங்கும் பெரிய மாங்காவிடமும் சின்ன மாங்காவிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்...


M Ramachandran
ஜூன் 13, 2025 20:01

தொண்டார்களை தான் நடக்க உடுவார்கள்


Sridhar
ஜூன் 13, 2025 18:40

நூறு நாள் போதாது பத்தாயிரம் நாளாக்கினால் நீங்கள் நிச்சயமாக வெற்றி கொள்வீர்கள்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 13, 2025 16:25

இது அன்புமணி ராமதாஸின் அறிக்கை..... ராமதாஸின் அறிக்கை அல்ல....!!!


SUBBU,MADURAI
ஜூன் 13, 2025 18:36

இந்த நடை பயண ஸ்டண்ட் எல்லாம் சின்ன மாங்காய்க்கு பலன் அளிக்காது.


சமீபத்திய செய்தி