உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 26 பேரிடர் மீட்புக்குழு; 219 படகுகள் தயார்!

26 பேரிடர் மீட்புக்குழு; 219 படகுகள் தயார்!

சென்னை: ''கனமழையை எதிர்கொள்ளும் வகையில், 26 பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் 219 படகுகள் தயார் நிலையில் இருப்பதுடன், 300க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது,'' என, துணை முதல்வர் உதயநிதி கூறினார்.சென்னை எழிலகத்தில் உள்ள, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், துணை முதல்வர் உதயநிதி, நேற்று ஆய்வு செய்தார்.பின், துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி: மாநகராட்சி சார்பில், 300 இடங்களில் நிவாரண மையங்கள், 50 முதல் 1000 நபர்கள் வரை தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில், தண்ணீர், பால் பாக்கெட், பிஸ்கெட், ரொட்டி, உணவு ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மேலும், 35 பொது சமையலறைகள் உள்ளன. சென்னையில் உள்ள, 22 சுரங்கப்பாதையில், கணேசபுரம், பெரம்பூர் ஆகிய இரண்டு சுரங்கப்பாதைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளனன. மேலும், 300க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு மணி நேரம் மழை விட்டால், நீர் அகற்றப்பட்டு விடும்.கடந்த 24 மணி நேரத்தில், எங்கும் மின் தடை ஏற்படவில்லை. 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு, 1500 அழைப்புகள் பெறப்பட்டு, 600 அழைப்புகளுக்கு, உடனடி தீர்வு காணப்பட்டுள்ளன.சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், 26 இடங்களில் பணியாற்ற உள்ளனர். இதுவரை, 24 குழுக்கள், சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்றடைந்துள்ளன. மீட்பு பணியில் ஈடுபட சென்னையில், 89 படகுகளும், பிற மாவட்டங்களில், 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.சென்னையில் 300; சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் என, 931 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்பட, அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணியில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சென்னையில் 13,000 பேர் உட்பட, மாநிலம் முழுதும் 65,000 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
அக் 16, 2024 16:13

இப்போதைய செய்தி 40% வடிகால் பணிகள் தான் பூர்த்தி அடைந்திருக்கின்றதாம்.


raja
அக் 16, 2024 09:55

4000 கோடி செலவு செய்யாமல் சென்னையை வெனிஸ் நகரமாக மாற்றி காட்டிய ஒன்கொள் கோவால் புற முதல்வருக்கு ஒரு ஓ போடு தமிழா...


raja
அக் 16, 2024 08:21

தயாராய் இருந்து என்ன புண்ணியம் 4000 கோடி யில் இன்னும் ஒரு 1000 கோடின்னு கணக்கு எழுதி போரானிவோ...


Kasimani Baskaran
அக் 16, 2024 05:18

கடலோர மண்ணடியிலேயே தண்ணீர் தேங்கினால் வேறு எங்கு தேங்காது?ஆகவே கப்பல் மூலம்தான் சென்னை வாசிகளை காப்பாற்ற முடியும். பத்து மிகப்பெரிய அளவிலான கப்பல்களை வாங்கி ஆங்காங்கே நிறுத்தி வைத்து மழை நீர் தேங்கியவுடன் அவை நீரில் மிதப்பது போல செய்தால் சிறிய படகுகள் மூலம் தாழ்வான பகுதியிலிருந்து மிகதாழ்வான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பல்களுக்கு கொண்டு சேர்க்கலாம். மழை இல்லாத காலங்களில் கப்பல்களை சுற்றுலா தலங்களாக மாற்றி விடலாம். சிங்காரச்சென்னை திட்டத்தில் ஒரு லட்சம் கோடி செலவில் நகர் முழுவதும் கால்வாய்களை அமைத்து அதில் படகுகளை வைத்து ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு செல்ல வசதி செய்து கொடுக்கலாம்.


கிஜன்
அக் 16, 2024 04:45

இந்த மழையின்மூலம் ...அழுக்கும் ..தூசியும் படிந்த சென்னை ....சுத்தமாக கழுவப்படும் ... அதுக்குஅப்புறம் சுத்தமாக வைக்கவேண்டியது பப்ளிக் பொறுப்பு ...


raja
அக் 16, 2024 09:46

ஏன் மழை தான் செய்யணுமா உடன் பிறப்பே..


raja
அக் 16, 2024 10:28

பிரசன்னா கூறிய வேலைகாரர்களை கூப்பிட்டு சுத்தம் செய்ய சொல்லலாமே...


J.V. Iyer
அக் 16, 2024 04:18

காஷ்மீர், மற்றும் ஸ்விட்ஸர்லாண்டை தமிழகத்துக்கே கொண்டுவந்து சென்னைவாசிகளுக்கு இந்த அனுபவத்தை கொடுக்கும் இந்த மாடல் ஆட்சிக்கு மனமார்ந்த நன்றி. போர்முலா கார் ரேஸ் போல இனி படகுப்போட்டியும் வையுங்கள் துணை முதல்வரே...


raja
அக் 16, 2024 09:49

இப்போ உள்ள சுச்சிவேசனுக்கு வெனிஸ் நகர சென்னையுடன் ஒப்பிட்டால் மிக சரியாக இருக்கும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை