உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் மக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்* எரிசக்தித் துறை* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை* போக்குவரத்துத் துறை* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை*வெளிநாடு வாழ் தமிழர் நலன்* பள்ளிக் கல்வித் துறை* உயர்கல்வித் துறை* கைத்தறி மற்றும் கதர்த் துறை* மனிதவள மேலாண்மைத் துறைககன்தீப் சிங் பேடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை* வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை* நீர்வளத் துறை* சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை* தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை* இயற்கை வளங்கள் துறைதீரஜ் குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்* உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைஅமுதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை* மாற்றுத் திறனாளிகள் நலத்துறை* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை* சிறுபான்மையினர் நலத்துறை* வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை* சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை* சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைஅரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள். அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

R. THIAGARAJAN
ஜூலை 20, 2025 19:59

இந்த நான்கு திறமைமிகு மக்களிடம் நற்ப்பெயர்களோடு இருக்கும் இவர்களை நான்கு ஆண்டுகளில் சுழற்சி முறையில் தேங்கியுள்ள நல்ல திட்டங்களை துரித படுத்தியும் படித்தவர்களின் வேலைவாய்ப்புகளும் மின்கட்டண மாதக் கணக்கீடு இன்னும் நல்ல நல்ல காரியங்களுக்கு உபயோகபடுத்தியிருந்தால் அதுவே நான்கு ஆண்டுகளின் சாதனையாகியிருக்கும் நால்வரின் ஆற்றல் மேலும் சிறக்க இறைவன் துனையிருப்பார்


R. THIAGARAJAN
ஜூலை 20, 2025 19:59

இந்த நான்கு திறமைமிகு மக்களிடம் நற்ப்பெயர்களோடு இருக்கும் இவர்களை நான்கு ஆண்டுகளில் சுழற்சி முறையில் தேங்கியுள்ள நல்ல திட்டங்களை துரித படுத்தியும் படித்தவர்களின் வேலைவாய்ப்புகளும் மின்கட்டண மாதக் கணக்கீடு இன்னும் நல்ல நல்ல காரியங்களுக்கு உபயோகபடுத்தியிருந்தால் அதுவே நான்கு ஆண்டுகளின் சாதனையாகியிருக்கும் நால்வரின் ஆற்றல் மேலும் சிறக்க இறைவன் துணையிருப்பார்


ஆரூர் ரங்
ஜூலை 14, 2025 22:04

ஐஏஎஸ் படித்து எதற்கு லாயக்கு? திருப்புவனம் லாக்கப் கொலை, யார் அந்த சார், வேங்கை வயல் போன்ற சம்பவங்களுக்கு முட்டுக் கொடுக்க மட்டுமே பயன்படுவார்களா? நேரடியாக திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக அறிவித்திருக்கலாம்.


panneer selvam
ஜூலை 14, 2025 16:58

It is really funny . These four IAS officers are known for their honesty , hard work and excellent rapport with public . Now they have stripped off their work and made them as spokesperson of DMK


Ganapathy Subramanian
ஜூலை 15, 2025 09:59

Amudha is already a spokeswoman of DMK. She was the one responding to EPSs telephone number allegations and she was the one who was giving misinformation from the Govt side to the media.


ஆரூர் ரங்
ஜூலை 14, 2025 16:04

யார் பெத்த புள்ளைங்களோ? உதவாக்கரை முதல்வருக்கு ஊதுகுழல் வேலை. இதுக்கு பதில் VRS வாங்கிகிட்டு போகலாம். இல்லாட்டி மத்திய அரசின் அயல்பணிக்கு மாறுதல் கேட்கலாம்.


VSMani
ஜூலை 14, 2025 15:44

வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது? அவரது ஈமெயில், மொபைல் போன் நம்பர் கிடைக்குமா?


ஆரூர் ரங்
ஜூலை 14, 2025 16:42

உண்மைல அயலக அணிதான் கட்டுப்படுத்தும்?


S.Shanmugam
ஜூலை 14, 2025 14:24

அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கவும் சில அலுவலர்களை நியமிக்கலாம்.


Narayanan
ஜூலை 14, 2025 13:30

ஸ்டாலின் தனது ஆளுமையின்மையை தொடர்ந்து நிரூபித்துவருகிறார் . பல குழுக்கள் அமைத்து பார்க்கிறார் . என்றாலும் ஆட்சி ஆளும் ஆளுமை இல்லை . இப்போது இவர்களை அழைத்து செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கிறார் . ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. வரி வசூல் செய்யும் ஒருவழி மட்டுமே எல்லாத்துறைகளிலும் அதுவும் அதிகமாக போக்குவரத்துத்துறை மூலமாக சம்பாத்திக்கிறது இந்த அரசு .


Nellai Ravi
ஜூலை 14, 2025 14:08

வரி வசூலும், GST மூலமாக மத்திய அரசு செய்து, மாநில அரசுக்கு கொடுக்கிறது. தமிழகத்தின் பங்கு 50% நேராக மாதாமாதம் வந்து விடுகிறது


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஜூலை 14, 2025 13:27

கண் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்


xyzabc
ஜூலை 14, 2025 13:27

இந்த IAS அதிகாரிகளுக்கு தர்ம சங்கடமான வேலை


சமீபத்திய செய்தி