உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 24 மணி நேரத்தில் 5 கொலைகள்; புள்ளி விபரத்தோடு சட்டம் ஒழுங்கு குறித்து இ.பி.எஸ்., கேள்வி!

24 மணி நேரத்தில் 5 கொலைகள்; புள்ளி விபரத்தோடு சட்டம் ஒழுங்கு குறித்து இ.பி.எஸ்., கேள்வி!

சென்னை: ''தி.மு.க., ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நடந்த கொலைகள் சவக்குழிக்கு சட்டம் ஒழுங்கு சென்றதுக்கான சாட்சி'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார்.அவரது அறிக்கை: தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி!https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=joh3iwmu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வந்த சில செய்திகள்:* தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை* திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு.* வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை* கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தை தட்டிக்கேட்ட 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை.* புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு ஜாதி தரப்பினர் இடையே மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு; பேருந்து கண்ணாடி உடைப்பு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு.நாளையோடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.ல, அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி. ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கு, கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம்.ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என நாளை ஒரு வீடியோஷூட் எடுத்துக்கொண்டு ஸ்டாலின் வருவார் பாருங்களேன்...! 'The Dictator' எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை! எனது ஆட்சியில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நடக்கவில்லை என்று சட்டசபையில் சொன்னவர், இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது.'ஆக, குற்றவாளிகள் கைது' என்று சொல்வீர்களே- அதையாவது செய்து, சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று தி.மு.க., அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். தமிழக மக்களே- இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை; இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள். 2026ல் பை பை ஸ்டாலின் என்று சொல்லப்போகும் உங்களின் தீர்ப்பு மூலம் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும். தமிழகம் உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான அமைதிப்பூங்காவாக மீண்டும் திகழும் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Rock
ஜூலை 01, 2025 17:06

சகோ இது கலிகாலத்தின் இறுதி காலம் உங்கள் உள்ளத்தை திருப்பிக்கொள்ளுங்கள் சொர்க்கத்தின் அரசாட்சி பூமியில் விரைவில் வருகின்றது. ஒவ்வொருவரும் நீதியின் அடிப்படையில் தீர்ப்பிற்கு உட்படுவார்கள். பாவமற்ற இயேசு கிறிஸ்து, நம்மிடம் அன்பு கொண்டு, நம் தவறுகளுக்கான தண்டனையை தானே சுமந்தார். அதனால், நமக்காக இருந்த தண்டனை நம்மை விலக்கி விட்டது. இதைவிட உயர்ந்த பரிகாரம் உங்களிடம் இருந்தால் தயவுசெய்து கூறுங்கள் எனவே, இவ்வுலக வாழ்க்கையும் அமைதியுடன் செல்கிறது இறைவனுடனான நிரந்தர வாழ்வும் நமக்கே அவர் கருணைமிகு நல்இருப்பவர் இறைவன் நல்லவர்


துர்வேஷ் சகாதேவன்
மே 06, 2025 21:02

எடுபுடி உங்க ஆட்சி காலத்தில் நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் ஸ்வாதி என்கிற மாணவி கொல்லப்பட்டாரே, வாச்சாத்தி சம்பவம் எவ்வளவு கேவலம் உங்கம்மா ஆட்சியில் ,தூத்துக்குடி துப்பாக்கி சூடு , கன்னியாகுமரி பேக்கரி ஆட் கொலை , தருமபுரியில் 3 பெண்கள் உயிரோடு எரித்து கொன்ற கூட்டம் நீங்கள் தானே , அன்று எரித்தவன் தன்டனை முடிந்து வெளியே.. ஆனா அந்த குடுமபம் ?


தமிழ்வேள்
மே 06, 2025 20:11

மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக காலம் கழிக்க வேண்டிய அத்தனை கிரிமினல் பயல்களும் திமுக உபிஸ்.,களாக சர்வ சுதந்திரமாக தமிழகத்தில் திரியும் போது, தினம் ஒன்றுக்கு ஐந்து கொலை என்பது ரொம்ப ரொம்ப குறைவு....


Rock
மே 08, 2025 16:14

மற்ற மாநிலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா அய்யா? உதாரணமாக பெண்களுக்கு எதிரான அதிகப்படியான குற்றங்கள் நிகழ்ந்த மாநிலம் உத்தரப் பிரதேசம், 2022 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் NCRB தகவல்களின்படி, உத்தரப் பிரதேசத்தில் அந்த ஆண்டில் 65,743 பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.


G Mahalingam
மே 06, 2025 19:41

கடந்த 4 வருடங்களில் சம்பாதித்து வைத்துள்ள சுமார் 50000 கோடி 50 பெரிய தலைகளின் பினாமியிடம் இருக்கு. தேர்தல் நேரத்தில் அதிக ஆம்புலன்ஸ் சுற்றி சுற்றி பணம் பட்டுவாடா நடக்க வாய்ப்பு. 500 ரூபாயை செல்லாது என்று அறிவித்தால் திமுக கண்டிப்பாக தோற்கும்.


Rock
மே 08, 2025 16:23

தமிழ்நாடு 1996 திருட்டுச் சொத்து குவிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த காலத்தில்\_known source of income-ஐவிட அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. In the Tamil Nadu 1996 Disproportionate Assets Case, the number one accused was J. Jayalalithaa, the former Chief Minister of Tamil Nadu. The case involved allegations of amassing wealth disproportionate to her known sources of income during her first term from 1991 to 1996.


Padmasridharan
மே 06, 2025 18:41

இந்த இடங்களிலெல்லாம் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கல்லூரிக்கு ஒரு தலைமை ஆசிரியர், அவர் எல்லா வகுப்பிற்கும் செல்ல இயலாது என்பதனால்தான் வகுப்பாசிரியர்களை நியமித்து இருக்கின்றார். அது போன்றுதான் இதுவும். பணத்தை வாங்கி பஞ்சாயத்து நடத்தும் காவலர்களால் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. இதுதான் உண்மை.


vetrivel iyengaar
மே 06, 2025 18:32

ஊழல் வழக்கில் 7 வருடம் சிறை தண்டனை பெற்ற உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bjp கட்சி கர்நாடக எம் எல் ஏ ஜனார்த்தன ரெட்டி குறித்து செய்தி போடமாட்டீங்களா ???


Apposthalan samlin
மே 06, 2025 18:02

திரும்பவும் திமுக தான் இப்பொது இருக்கிற நிலைமையில்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 06, 2025 17:38

என்னதான் சொல்லுங்க .... அவங்க கிட்டே விட்டமின் ப இருக்குது ..... அதை வெச்சு வாக்காளர்களை விலைக்கு வாங்கிடுவாங்க ..... அதை நம்பித்தான் களமிறங்குறாங்க ..... நீங்க மக்கள் அதிருப்தியில் இருப்பாங்கன்னு களமிறங்குறீங்க ..... பாமர வாக்காளர்களுக்கு எது முக்கியம் ன்னு யோசியுங்க ..... பாமர வாக்காளர்களின் சதவிகிதம்தான் அதிகம் .....


துர்வேஷ் சகாதேவன்
மே 06, 2025 21:04

என் உங்க மோடி அண்ட் கோ விடம் பணமே இல்லையா , எல்லாம் கார்பொரேட் மிரட்டி வாங்கிய தொகைதான் PM கேர் , எடுத்து செலவு செய்ய சொல்லு , சரி பாவ யாத்திரை 1000 கோடி செலவு எங்கிருந்து வந்தது , பிஜேபி மட்டும் விதி விலக்கா என்ன


thehindu
மே 06, 2025 17:20

இதற்க்கு பெயர் சட்டம் ஒழுங்கு என்றால் பகல்காம் என்ன ஒழுங்கு ? இந்திய பாதுகாப்பு படை தோல்வியடைந்து விட்டது என்று அர்த்தமா?


N Sasikumar Yadhav
மே 06, 2025 18:13

உம்மை மாதிரியான பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மதத்தின்பேரில் நிறைய ஆட்கள் இருக்கிறானுங்க . நீங்க கேட்க வேண்டியது காஷ்மீரின் மொதல்வரை .


thehindu
மே 06, 2025 17:18

நாடு முழுவதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை கொலைகள் நடக்கிறது என்று மோடி கூறவில்லையா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை