உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,000 கொலைகள்; 55,000 கொள்ளைகள்: அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,000 கொலைகள்; 55,000 கொள்ளைகள்: அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில், 6,000 கொலைகள், 55,000 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.ஏ.ஐ.ஓ.பி.சி., எனப்படும் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு ரயில்வே ஊழியர் சங்கம் சார்பில், ரயில்வேயில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை தெற்கு ரயில் தலைமை அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அன்புமணி கலந்துகொண்டு பேசினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு, மூன்று உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்த விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதன் வாயிலாக, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர், 69 சதவீதத்துக்கு மேல் உள்ளனர் என்பதை நிரூபணம் செய்ய வேண்டும். இதை செய்யாமல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என முதல்வர் கூறுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 6,000 கொலைகள், 55,000 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது. தி.மு.க., அளித்த 550 தேர்தல் வாக்குறுதிகளில், இதுவரை 45 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, தமிழக மக்களும், தமிழக அரசு மீது கோபத்தில் உள்ளனர். இது வரும் தேர்தலில் தெரியும். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின், கூட்டணி ஆட்சி அமையும்; அதில், பா.ம.க., இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

MADHAVAN
நவ 14, 2024 13:24

அன்புமணி ராமதாஸ் அவர்களே, 2018 டு 2021 வரைக்கும் நீங்க கூட்டணி வச்ச அதிமுக ஆட்சில 10650 கொலைகள் நடந்துச்சு னு கிரைம் -tamilnadu தேடல் சொல்லுது, நீங்க அப்போ மாங்காயை பரிச்சீங்களா ?


Muthu Kumaran
நவ 14, 2024 13:33

விடுங்கள் , தற்போது அரசு சட்டம் ஒழுங்கா வைத்துள்ளது ,


Barakat Ali
நவ 14, 2024 11:34

டாக்டர் அன்புமணி அவர்களே.... முன்னேறிய மாநிலத்தை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது .......


Mario
நவ 14, 2024 09:35

2 பேர் உயிருடன் எரித்து கொலை.. 9 பேர் மாயம்.. மணிப்பூரில் மீண்டும் பதட்டம்..


hari
நவ 14, 2024 17:51

பாவம் இந்த மணிப்பூர் ...மனநலம் பாதிக்கப்பட்டவர் போல


INDIAN
நவ 14, 2024 08:25

இது அரசின் கிரிம் ரிப்போர்ட் 2020 ல் SNAPSHOTS - 2020  IPC cases : 9,91,700 increase of 430%  SLL cases: 4,85,981 increase of 69.3%  Total Crimes increase : 202.7%  IPC Crime Rate : 1075.3 SLL Crime Rate: 581.1  Persons arrested Under IPC: 13,45,778 Under SLL: 5,34,611  An average of 1.4 persons arrested per IPC case.  Disposal by Police IPC cases: 28.1% SLL cases: 52.4%  Charge sheeting rate IPC: 91.7% SLL: 95.2%  Conviction rate IPC: 66.0% SLL: 93.6%  Decrease in Murders: 4.8%  Increase in Rapes: 7.4%  Increase in Dowry deaths: 42.8%  Decrease in Robberies: 17.2%  Percentage of Recovery: 62.1%  Crimes against Women: 6,630 Increase: 11.7%  Crimes against Children: 4,338 Increase: 4.8%  Increase in NDPS Act cases: 24.8%.  Preventive Detention NSA: 18, Goondas: 2,466. Others: 442,  Economic Offences cases Against Finance Institutions: Nil Number of depositors: Nil, Amount involved: Rs.0.00 crores. Amount refunded: Rs.0.00 crores  Cyber Crime cases reported: 782  Highest incidence of IPC Cases: Chennai City 88,388 Crime Rate: Tiruppur City 1724.7  Road accidents: 45,484 Deaths: 8,059 Decrease: 23.4%  Police personnel Killed on duty: 55 Injured on duty: 107  No civilians were neither killed nor injured in by various Police operations.  Deaths in police custody: 6


Duruvesan
நவ 14, 2024 08:03

அன்பு சார் நானும் பாட்டாளி தான், உங்களுக்கு ஓட்டு போட கூடாதும்னு நெனச்சேன், இங்க வேற கட்சி ஏதும் சரி இல்லை, அது இல்லாம மேடம் நின்னங்க, இறங்கி வேலை செய்தோம். நாம் தோத்தது காரணம் சாதி முத்திரை. இந்த சாதி உட்டா உங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா?


N.Purushothaman
நவ 14, 2024 06:58

இதெல்லாம் சரி ...அதென்ன பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ?


kuruvi
நவ 14, 2024 06:25

ஒரு குற்றம் நடந்தால் அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் குற்றதில் சேற்பதுண்டு.அப்படி சட்டத்தில் இருக்கும்போது சாராய போதையினால் ஏற்படும் கொலைகளுக்கெல்லாம் சாராயம் விற்கும் அரசு இலாக்காவையையும் ஏன் குற்றத்தில் சேற்பதில்லை. அரசு இலாக்கா சட்டதிற்கேல்லாம் அப்பற்பட்டதா.ஆறாயிரம் உன்னத உயிர்களை உட்கொண்ட அரசுக்கு மனசாட்சி என்பதெல்லாம் இல்லையா?இதை திரு. அன்புமணி அவர்கள் ஆராய்ந்து தங்கள் கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள் மூலமாக முன்னெடுத்து செல்லவேண்டும்.செய்வீர்களா?வெறும் மேடை பேச்சாக்கிடாதீர்.


Karthikeyan K Y
நவ 14, 2024 05:19

எதிர் கட்சி தலைவர் என்பவர் முதல்வருக்கு மக்கள் பிரதிநிதியாக சமம் அவருடைய கேள்விகளுக்கு பொறுப்பற்ற நய்யாண்டி பதில்களை தந்து கொண்டு இருக்கிறார் முதல் அமைச்சர் , கொலைகள், கொள்ளைகள், போதை பொருட்கள் , தங்க கடத்தல்கள், ரேஷன் அரசி மற்றும் பொருட்கள் கடத்தல் , போலீஸ், ஆசிரியர்கள், பெண்கள், பொது ஜனத்திற்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பொறுப்பாக பதில் கூற வேண்டும் திரு அன்புமணியின் கேள்விக்கு ஒரு பதில் தேவை மருத்துவமனைக்கு வரும் எல்லோரையும் கண்டிப்பாக சோதிக்க முடியாது இது ஒரு விசித்திரமான சம்பவம் . இதுவரை ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை, ஏன் ராமானுஜம் கொலை கூட கண்டு பிடிக்க முடிய வில்லை . தினம் திராவிட மாடல் திராவிட வெங்காயம் பற்றி அறிக்கை, நிகழ்ச்சிகள், மா சுப்ரமணியம் அறிக்கை விடுகிறார் சேகர் பாபு அறிக்கை விடுகிறார் மேயர் பிரியா சென்னை மழையினால் மக்கள் பாதிக்க பட்ட போது போட்டோஷூட் மட்டுமே பார்க்க முடிகிறது இந்த ஆட்சியை அகற்ற மக்கள் செய்வார்களா மதவாதம், மொழிவாதம், இனவாதம், ஜாதிவாதம், கல்வி, மருத்துவம், பிணம், மழை, புயல், போதை பொருள், தொழில்துறை , மக்கள் நலம், கொலை, கொள்ளை எல்லாவற்றிலும் அரசியல் அறிக்கை மட்டுமே - தமிழக மக்கள் இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டுமோ


INDIAN
நவ 14, 2024 08:45

பப்பு , அமுல் பேபி என்பதெல்லாம் பொறுப்புள்ள பேச்சா ?


Kasimani Baskaran
நவ 14, 2024 04:54

8% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு தலை சிறந்த மாடல் என்று சொல்வது வெறும் உருட்டு என்றுதான் சொல்லவேண்டும்.


முக்கிய வீடியோ