உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை: 9ம் வகுப்பு தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., புது முடிவு

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை: 9ம் வகுப்பு தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., புது முடிவு

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 'தேசிய கல்விக் கொள்கை - 2020' அம்சங்களை தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களின் தேர்வு பயத்தை தவிர்க்க, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை, 2026 - 27ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த, சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு கூட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகளை, புத்தகங்களை பார்த்து எழுத, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தை தணிக்க, இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக, சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நாடு முழுதும் பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், 2023ம் ஆண்டு முதல் சோதனை முறையில், பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளை, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புத்தகம் பார்த்து எழுதும் முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஆக 11, 2025 11:52

கேள்விகளுக்கான பதில்களை பார்த்து பார்த்து எழுதும்போது வேகம் குறையும், அதிக கேள்விகளுக்கு பதில் எழுதமுடியாது. மதிப்பெண்கள் குறையும். ஆனால் நன்றாக படித்து புத்தகம் பார்க்காமல் எழுதினால் வேகமாக எழுதமுடியும், அதிக கேள்விகளுக்கும் பதில் எழுதமுடியும். அதிக மதிப்பெண்கள் வாங்கலாம்.


Indhuindian
ஆக 11, 2025 11:47

அப்படியாவது புஸ்தகத்தை தொறந்து பார்த்தல் சரி


Indhuindian
ஆக 11, 2025 09:12

எங்களுக்கும் இந்த மாதிரி புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வு நடத்துவார்கள். ஆனால் ஒரு வித்தியாசம். ரெண்டு கேள்வித்தாள்கள் ஒன்று புத்தகத்தை பார்த்து எழுதுபவர்களுக்கு இன்னொன்று புத்தகம் பார்க்காமல் எழுதுபவர்களுக்கு. ரிசல்ட்டை பாத்தா புத்தகத்தை பார்த்து எழுதுபவர்கள் ஒன்னு பாய்லாகிடுவாங்க இல்லேன்னா குறைஞ்ச மாற்குதான் வாங்குவாங்க. அந்த பேராசிரியர் எப்போதும் சொல்வது "Better to write with mind and closed books rather than closed mind and book" ஒரு வாசகம்ன்னாலும் திருவாசகம்


Ganesh
ஆக 11, 2025 10:40

உண்மை


Rajan A
ஆக 11, 2025 07:07

விளங்கிடும். இதற்கு பதிலாக புத்தகம் வைத்திருந்தாலே பாஸ் என்கிற திட்டம் கொண்டு வந்திருக்கலாம். மத்தியிலும் திராவிட வாசனை வீசிவிட்டதோ?


சமீபத்திய செய்தி