உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்கணும்; சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்கணும்; சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: 'ஒரு கட்சியை நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுவதும் கண் இருக்க வேண்டும்' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது: ஒரு கட்சியை நடத்த வேண்டும் என்பது சாதாரணமானது அல்ல. கட்சியை நடத்துகிற தலைவருக்கு, முகத்தில் இரண்டு கண் அல்ல. உடல் முழுவதும் கண்ணாக இருக்க வேண்டும். உடல் முழுவதும் சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும். காரணம் பல்வேறு குணங்களைக் கொண்ட, பல்வேறு விதமான மனிதர்களை அடங்கியது ஒரு கட்சி. எல்லோரையும் ஒன்று சேர்த்து அதனை அழைத்து செல்லும் திறமை எந்த கட்சிக்கு இருக்கிறதோ அந்த கட்சி, வெற்றி பெறும். செழிப்பாக இருக்கும். அது இல்லை, என்றால் அந்த கட்சி கொஞ்ச நாளில் இல்லாமல் போய்விடும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
அக் 20, 2025 22:50

உடல் முழுவதும் கை இருக்கணும்.... மாமூல் வாங்க.


viki raman
அக் 20, 2025 22:48

ராஜ தந்திரி வாழ்க


kjpkh
அக் 20, 2025 22:37

உடல் முழுவதும் கண்கள் இருந்தாலும் அவ்வப்போது மூடிக்கொள்ள வேண்டும். உதாரணமாக கள்ளச்சாராய் சாவு


Sun
அக் 20, 2025 21:35

இவர் யாருக்கு இதைச் சொல்கிறார்? ஒரு வேளை பெயர் குறிப்பிடாமல் அவருக்கு இதை சொல்கிறாரோ? இவருக்கு வேற இந்த தடவ சீட் இல்லேன்னு மக்கள் பேசிக்கிறாங்க.


Modisha
அக் 20, 2025 21:23

உடம்பு முழுதும் வேண்டாம், அந்த ரெண்டு கண் , ஒரு மூளை ஒழுங்காக உங்க தலைவருக்கு இருந்தா தமிழ்நாடு எவ்வளவோ நல்லா இருக்குமே .


sankaranarayanan
அக் 20, 2025 21:13

உடல் முழுவதும் கண் இருந்தால்தான் மணல் கொள்ளையை யாருமே கண்டுபிடிக்க முடியவில்லை கண்டுபிடிக்கவும் முடியாது அவ்வளவு கண்கள் ஜாக்கிரதையாக செய்யும் இவருடைய செயல் இவரே புகழ்கிறார் ஊழலுக்கென்றே பெயர்போன கட்சியின் பிராதான தலைவர் பேசும் பேச்ச்சா இது


திகழ்ஓவியன்
அக் 20, 2025 21:10

ஒரு 51 வயது கிழவர் ஒரு இன்சிடென்ட் நடந்தது , தன்னை நம்பி வந்தவர்களை பற்றி எண்ணாமல் , உடனே கார் ஏறி FLIGHT ஏறி மீண்டும் கார் ஏறி வீட்டுக்குள் புகுந்து கொண்டு இன்று வரை வெளியே வரவில்லை , 7 அடி 90 கிலோ வீரன் ஆதவா அர்ஜுனன் அப்படியே FLIGHT பிடித்து பிஜேபி ஆளும் மாநிலம் உத்திர KAAND , புஸ்ஸி ஆனந்த் பாண்டிச்சேரி சாராய கடைக்குள் ஒளிந்து கொண்டார் , இது தான் TVK கட்சியின் அவலம் இவரை நம்பி எப்படி TN கொடுக்க முடியும்


திகழ் ஓவியன், Ajax Ontario
அக் 20, 2025 21:05

காமெடி. அதெல்லாம் எதுவும் வேணாம் உங்களைப்போன்ற விசுவாசிகள், இருந்தால் அனைவரும் தலைவரே


Vasan
அக் 20, 2025 20:52

திரையுலகில் நெற்றிக்கண் திறந்த செவாலியார் சிவாஜி கணேசன் அவர்களுக்கு உடம்பு முழுவதும் கண் இல்லாததால் தான் அவர் கட்சி காணாமல் போனது என்கிறாரோ ?


சிட்டுக்குருவி
அக் 20, 2025 20:32

உடல்முழுவதும் கண் இருக்கின்றதோஇல்லையோ உடல்முழுவதும் காது இருக்கவேண்டும் மற்றவர்கள் கஷடங்களை கேட்டறிய .மாறாக திராவிடக்கட்சியினருக்கு உடல்முழுவதும் கைகள்தானிருக்கின்றன அள்ளிக்கொள்ள .தமிழகத்தின் எந்த ஒரு வளங்களையும் விட்டுவைக்கவில்லை .வளங்கள் நிறைந்திருந்த திருநாட்டில் என்னவளம் மீதி இருக்கு தமிழ்நாட்டில் என்றாகிவிட்டது . சைக்கிள் வாங்க கஷ்டப்பட்டவரெல்லாம் உங்கள் கட்சியில் சேர்ந்து உடனே பெரிய லார்ரி சைஸ் உள்ள SUV வாங்குற வித்தையெல்லாம் எப்படி கத்தூதரிங்க என்பதை சாதாரண மக்களுக்கும் சொல்லித்தந்தால் எல்லோரும் இன்புற்று வாழ்வார்கள் .சுமார் 60-70 கலில் படித்தவரெல்லாம் எப்படியாவது ஒரு பட்டம் பெற்றுவிட்டால் போதும் வேளையில் சேர்ந்து குடும்பத்தை முன்னேற்றலாம் என்று கருதுவார்கள் .ஆனால் இப்போதெல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து ஒரு வார்டு கவுன்சிலராகிவிட்டால் போதும் கார் ,பங்களா,பலதலைமுறைக்கு சொத்துக்கள் எல்லாம் சம்பாதித்துவிடலாம் என்று நினைக்கின்றார்கள் .அது நிஜம்தானே .உங்களையே கல்லூரிப்படிப்பிற்கு வசதியில்லாமல் MGR உதவினார் என்று வரலாறு கூறுகின்றது .அப்படிப்பட்டவர் இப்போது உலக பணக்காரர் வரிசையில் இடம்பிடிக்கவில்லையா ? உங்களுக்கு வேலூர் மாவட்டதில் ஒவ்வொரு கிராமத்தை பற்றியும் நன்றாக தெரியும் .கடந்த 20 வருடங்களாக சாலைவசதிக்கேட்டு போராடுகின்றோம் என்று தெருவில் ஏற்பட்ட சேற்றில் நாற்றுநடவு செய்த வீடியோ ஒன்றை பதிவு செய்து எரிகுத்தி கிராம மக்கள் வெளியிட்டு இருக்கின்றார்களே நீங்கள் தினமலர் பத்திரிகையை படிப்பதில்லையா ?படிப்பதில்லையென்றாலும் பரவாயில்லை இந்த பதிவு உங்கள் கவனத்திற்கு வரும் என்று நினைக்கின்றேன் .மேலும் உங்கள் ஆட்சியின் லக்ஷணம் சென்னையில் புளியன்தோப்பு மக்கள் 3 அடி சாக்கடை நீர்த்தேக்கத்தில் கடந்த ஒருவாரமாக தவிகின்ற காட்சி உலகம் பூராவும் பரவி நாறுவது உங்கள் மூக்கிற்கு எட்டவில்லையா ?இன்னும் இதுபோன்ற காட்சிகள் பல இருக்கின்றது .தினமலர் வாங்கிப்படியுங்கள் .ஒருவேளை உங்களுக்கு தினமலர் வாங்க வசத்தியில்லையென்றால் இந்த பதிவிற்கு பதிலலிதால் உங்களுகாக இலவச சந்தா செலுத்தப்படும் .


சமீபத்திய செய்தி